19 வயதிற்குட்பட்ட அணிகள் மோதும் இளையோர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அணிகளின் அட்டவணையை ஐ.சி.சி. நேற்று அறிவித்தது.
அதன்படி மொத்தம் 16 அணிகள் இந்தத் தொடரில் மோதுகின்றன. இந்த 16 அணிகளும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் 'டி' பிரிவில் இலங்கை உள்ளது. 'டி' பிரிவில் இலங்கையுடன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் உள்ளன.
'ஏ' பிரிவில் நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, கென்யா ஆகிய அணிகளும். 'பி' பிரிவில் சிம்பாப்வே, இந்தியா, அவுஸ்திரேலியா, பபுவா நியூகினியாவும் இடம்பெற்றுள்ளன. 'சி' பிரிவில் பங்களாதேஷ், நபிபியா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தொடர் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதுவரை இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா
ஆகிய அணிகள் தலா மூன்று முறை 19 வயதிற்குட்பட்ட இளையோர் உலகக் கிண்ணத்தை வென்றுள்ளன. இலங்கை அணி இதுவரையில் உலகக் கிண்ணத்தை வென்றதில்லை. ஆனால் கடந்த 2000ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறி அதில் தோல்வி கண்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM