அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சி இன்று மாலை கொழும்பில் கண்டனப் பேரணியொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுசெய்துள்ளது. குறித்த கண்டனப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இக்கண்டனப் பேரணியில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் கூட்டு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் கூட்டு எதிர்க்கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று கொழும்பில் கூடவுள்ள கூட்டு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பி.பி.4 மணியளவில் இப்பன்வெல சந்தியிருந்து லிப்டன் சுற்றுவட்டத்தினூடாக நரக மண்டபப் பிரதேசத்திற்கு பேரணியாகச் சென்று நகர மண்டபத்திற்கு அருகில் அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
தேசிய வளங்களை சர்வதேச மயப்படுத்தல், விவசாயிகள், பண்ணை வளர்ப்பாளர்கள், வர்த்தகம் உட்பட சகல துறைகளிலும் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமை, மாணவர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் முன்னெடுக்கும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை அரசாங்கம் அடக்குமுறையூடாக முடக்க முற்படுகின்றமை, சட்டம் நீதி, மற்றும் நிதித்துறைகளில் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளமை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த கண்டனப் பேரணி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்ததக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM