15 வயதிற்குட்பட்ட சாவ் கால்பந்தாட்ட கிண்ணத்திற்கான இலங்கை அணி தயார்

Published By: Robert

17 Aug, 2017 | 09:23 AM
image

நேபாளின் காத்­மண்டு நகரில்  நாளை 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய கால்­பந்து சம்­மே­ள­னத்தின் (SAFF) 15 வய­திற்­குட்பட்டவர்­க­ளுக்­கான கால்­பந்து தொடரில் பங்­கேற்கும் இலங்கை அணியை இலங்கை கால்­பந்து சம்­மே­ளனம் வெளி­யிட்­டுள்­ளது.

இந்த அணிக்­கான 30 பேர் கொண்ட வீரர்கள் அணி­யொன்று கடந்த ஜூன் மாதம் தெரிவு செய்­யப்­பட்­டது. 

குறித்த அணியில், கடந்த மார்ச் மாதம் இடம்­பெற்ற தெற்

 கா­சிய – ஜப்பான் 16 வய­திற்கு உட்­பட்ட 4 நாடு­க­ளுக்கிடை­யி­லான போட்டித் தொடரில் இலங்கை அணி யில் அங்கம் வகித்த 10 வீரர்கள் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தனர்.

எனினும், அதில் 8 வீரர்­களே இறுதி அணியில் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளனர். 

ரவி­குமார் தனுஜன், ஜீவக சமோத், மொஹமட் ரிகாஸ், மொஹமட் ருஸ்கான், மொஹமட் ஆஷிக், நாபீல் நிசாம், சந்­தீப வாஸ் மற்றும் விஷால்க  ஆகி­யோரே குறித்த வீரர்கள்.

இந்த இறுதி அணியில் 3 கோல் காப்­பா­ளர்கள், 7 பின்­கள வீரர்கள், 8 மத்­தி­ய­கள வீரர்கள் மற்றும் 5 முன்­கள வீரர்கள் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

இம்­முறை 15 வய­திற்­குட்­பட்ட அணியை நீர்­கொ­ழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்­லூரி வீரர் சன்­தீப வாஸ் தலைமை தாங்­க­வுள்ளார். 

குருணா­கல் மலி­ய­தேவ கல்­லூரி வீரர் ஜீவக சமோத் அணியின் உப தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இந்த அணியில் வட மாகா­ணத்தைச் சேர்ந்த யாழ்ப்­பாணம் தெல்­லிப்­பழை மகா­ஜனாக் கல்­லூரி மாணவன் ரவி­குமார் தனுஜன் மற்றும் யாழ்ப்­பாணம் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூரி மாணவன் இகினம் டினியாஸ் ஆகி­யோரும் இடம்­பெற்­றுள்­ளனர். 

அதேபோல், கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து ஏறாவூர் அலிகார் தேசிய பாட­சாலை மாணவன் மொஹமட் ரிஹான் அணியில் உள்­வாங்­கப்­பட்­டுள்ளார்.

தென் மாகா­ணத்தில் இருந்து ஷெஹான் பிரயன் மற்றும் ருமேஷ் மெண்டிஸ் ஆகியோ ரும், கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்­லூரி, நீர்­கொ­ழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்­லூரி, கண்டி சில்­வெஸ்டர் கல்­லூரி மற்றும் அநு­ரா­த­புரம் புனித ஜோசப் கல்­லூரி என்­ப­வற்றில் இருந்து தலா இரண்டு வீரர்கள் இந்த அணியில் அங்கம் வகிக்­கின்­றனர்.

போட்டித் தொடரில் குழு ஏ இல் இலங்கை, பங்­க­ளாதேஷ், பூட்டான் ஆகிய அணி­களும் குழு பி இல் இந்­தியா, மாலைத்­தீ­வுகள், நேபாளம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இத்தொடரில் இலங்கை அணி தமது முதல் போட்டியாக நாளை பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41