நேபாளின் காத்மண்டு நகரில் நாளை 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான கால்பந்து தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை இலங்கை கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
இந்த அணிக்கான 30 பேர் கொண்ட வீரர்கள் அணியொன்று கடந்த ஜூன் மாதம் தெரிவு செய்யப்பட்டது.
குறித்த அணியில், கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற தெற்
காசிய – ஜப்பான் 16 வயதிற்கு உட்பட்ட 4 நாடுகளுக்கிடையிலான போட்டித் தொடரில் இலங்கை அணி யில் அங்கம் வகித்த 10 வீரர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
எனினும், அதில் 8 வீரர்களே இறுதி அணியில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
ரவிகுமார் தனுஜன், ஜீவக சமோத், மொஹமட் ரிகாஸ், மொஹமட் ருஸ்கான், மொஹமட் ஆஷிக், நாபீல் நிசாம், சந்தீப வாஸ் மற்றும் விஷால்க ஆகியோரே குறித்த வீரர்கள்.
இந்த இறுதி அணியில் 3 கோல் காப்பாளர்கள், 7 பின்கள வீரர்கள், 8 மத்தியகள வீரர்கள் மற்றும் 5 முன்கள வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.
இம்முறை 15 வயதிற்குட்பட்ட அணியை நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வீரர் சன்தீப வாஸ் தலைமை தாங்கவுள்ளார்.
குருணாகல் மலியதேவ கல்லூரி வீரர் ஜீவக சமோத் அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில் வட மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவன் ரவிகுமார் தனுஜன் மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் இகினம் டினியாஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல், கிழக்கு மாகாணத்திலிருந்து ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவன் மொஹமட் ரிஹான் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
தென் மாகாணத்தில் இருந்து ஷெஹான் பிரயன் மற்றும் ருமேஷ் மெண்டிஸ் ஆகியோ ரும், கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி, நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, கண்டி சில்வெஸ்டர் கல்லூரி மற்றும் அநுராதபுரம் புனித ஜோசப் கல்லூரி என்பவற்றில் இருந்து தலா இரண்டு வீரர்கள் இந்த அணியில் அங்கம் வகிக்கின்றனர்.
போட்டித் தொடரில் குழு ஏ இல் இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் ஆகிய அணிகளும் குழு பி இல் இந்தியா, மாலைத்தீவுகள், நேபாளம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இத்தொடரில் இலங்கை அணி தமது முதல் போட்டியாக நாளை பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM