பாகிஸ்தானுக்கான இலங்கையிலுள்ள உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானுடைய 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமிடையிலான சுமார் 2300 வருட தொடர்பை கொண்டாடும் வகையில் “என் என்டரிங் ஃப்ரென்டஸிப் : ஸ்ரீ லங்கா என்ட் பாகிஸ்தான்” ( An Enduring Friendship; Sri Lanka and Pakistan ) எனும் புத்தகத்தை நேற்று வெளியிட்டது.
இந் நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஸர்ப்ராஸ் அஹமட் கான் ஸிப்ரா,
பாகிஸ்தான் மற்றும் இலங்கையானது சமுத்திர தொடர்புடையது எனவும் இத் தொடர்பானது ஏறத்தாழ 2300 வருட பழைமையானதெனவும் 1948 இல் பாகிஸ்தான் சுதந்திரமடைந்ததன் பின்னர் அப்போதைய இலங்கை பிரதமர் டி.எஸ் சேனாநாயக்கவின் பாகிஸ்தானுக்கான விஜயத்தின் பின்னர் புதுப்பிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
மேலும் புத்தகத்தின் ஆசிரியரான அர்ஷாட் காஸிம் தனது உரையில்,
இப் புத்தகமானது இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு, இராணுவ ஆக்கிரமிப்பு தலையீடு இல்லாத சுமுகமான உறவு முறை மற்றும் ஆரம்பகால தொடர்பு அது வளர்ச்சி அடைந்த விதம் என பல தகவல்களை சுமந்துள்ளது என தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சபாநாயகர் கரு ஜயசூரியவும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பாண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, ரிஷாட் பதியுதீன், தயா கமகே, எ.எச்.எம் பௌஷி, எம.எல்.எ.எம்.ஹிஸ்புல்லாஹ், அனோமா கமகே, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு புத்தகத்தின் பிரதிகளையும் பெற்றுக் கொண்டனர்.
இந் நிகழ்வில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் தேசிய கீதங்கள் தேசிய கலாசாரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் ஒலிபரப்பப்பட்டமையானது அனைவரினதும் பாராட்டைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM