கொழும்பு பாதுகாப்பு மாநாடானது " பூகோள மற்றும் வலய பாதுகாப்பு பிரச்சினை" என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச பயங்கரவாத நகர்வுகள் குறித்து ஆராயும் நோக்கத்தில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கடந்த கால யுத்தத்தின் பின்னர் பயங்கரவாதத்தை தோற்கடித்ததன் விளைவுகளும் அதன் தாக்கங்களுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் இந்த பாதுகாப்பு மாநாடு ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஏழாவது தடவையாக இடம்பெறும் இந்த மாநாடு இம்மாதம் 28,29 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. மேலும் இந்த மாநாட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் 800 பேர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் மாநாட்டில் உரை நிகழ்த்த வெளிநாடுகளின் 15 பிரதிநிதிகளும் உள்நாட்டில் இருந்து 12 பேரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் 2017 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கு உலகத்திலுள்ள பாதுகாப்பு பங்குதாரர்கள் , கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்களின் பங்களிப்புடன் இடம்பெறுகின்றது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் பூகோள பாதுகாப்பிற்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலான விடயங்களை உலகளாவிய ரீதியில் அறிந்துகொள்ள பூகோள வலய குடியரசு நிபுணர்களின் பங்களிப்புடன் இம்முறை பாதுகாப்பு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இம்முறை பாதுகாப்பு மாநாட்டில் தீவிரவாத வன்முறைகள் செப்டெம்பர் 11 தாக்குதலில் இருந்து ஐ.எஸ்.அமைப்பு பூகோள வன்முறை தீவிரவாதம், தீவிரவாத செயற்பாடுகளுக்கு எதிரான பாதுகாப்பு செயற்பாடுகள், கிழக்கு மற்றும் மேற்கத்தேய நாடுகளின் பங்களிப்பு, பிராந்திய அமைப்புகளின் பங்களிப்பு, சைபர் சவால்கள், ஐக்கிய நாடுகளின் மூலோபாயங்கள், உள்நாட்டு பாதுகாப்பு மூலோபாயங்கள், மாநில மற்றும் சர்வதேச பாதுகாப்பு உறவுகள் மற்றும் தீவிரவாத செயற்பாடுகள், உலக நிர்வாகத்தில் இராணுவ செயற்பாடுகள் எனும் தலைப்புகளின் இந்த மாநாட்டு கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM