கட்டாரில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் சர்வதேச உதைபந்தாட்ட உலக கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதற்காக கட்டாரில் முன்னெடுக்கப்படுகின்ற கட்டுமான அபிவிருத்தி பணிகளுக்கு சுமார் 2 மில்லியன் பணியாளர்கள் இருத்தப்பட்டுள்ளனர். இதற்கான மனித வளத்தை ஆசிய நாடுகளில் இருந்தும் ஆபிரிக்க பிராந்திய நாடுகளில் இருந்தும் கட்டார் பெற்றுக் கொண்டுள்ளதாக மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் தெரிவித்தார்.
கொழும்பு 7 இல் அமைந்துள்ள தொழில்சார் நிபுணர்களின் அமைப்பின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இலங்கையை சேர்ந்த சுமார் 85 ஆயிரம் பேர் வரை கட்டாரில் பணியாளர்களாக உள்ளனர். இதில் 23 ஆயிரம் பேர் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவம் செய்துள்ளனர். இவர்களின் தொழில் உரிமைகள் கட்டாரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்ட தொழில்களில் ஈடுபடுத்தல் , உரிய சம்பளம் வழங்காமை மற்றும் வேலை மணித்தியாலங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளிலும் பாரிய நெருக்கடிகளே ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட இலங்கை தொழிலாளிகள் அந்நாட்டு ஊழியர் நலன் அமைப்புகளுக்கு சென்றாலும் நீதி கிடைப்பதில்லை. எனவே சர்வதேச தொழில் சட்டங்கள் குறித்து பல்வேறு சர்ச்சை நிலை தற்போது கட்டாரில் ஏற்பட்டுள்ளது. கட்டாருக்கு எதிராக பல்வேறு நாடுகளை சார்ந்த சிவில் அமைப்புகள் சர்வதேச தொழில் தாபனத்திடம் முறையிட்டுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு எதிர்வரும் நவம்பரில் ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு கட்டாரில் பணிபுரியும் எமது பணியாளர்களின் உரிமைகளுக்காக பணியாற்ற வேண்டும். கட்டார் நாட்டில் புலம்பெயர் பணியாளர்களுக்கு எதிரான உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கு ஒரு விசாரணை ஆணைக்குழுவை அமைப்பதற்கு வலியுறுத்துகின்றோம் . கட்டாரில் இடம்பெற்ற புலம்பெயர் பணியாளர்கள் மீதான உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஆணைக்கு குழு அமைக்க உள்ள சர்வதேச தொழில் தாபனத்திற்கு இலங்கை அலுவலகமும் பங்களிப்புகளை செய்து நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். சர்வதேச நியமங்களுக்கு இணங்கி, இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து விசார ணையை மேற்கொள்வதற்கு சுயாதீன ஆணைக்குழு அமைக்கும் வரை கட்டாருக்கு பணியாட்களை அனுப்பு வதை இலங்கை நிறுத்த வேண்டும். இந்த விடயங்களை பரிந்துரைகளாக முன் வைக்கின்றோம் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM