தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான தயார் படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகள் யாவும் இன்று நள்ளிரவு முதல் 2017 ஆம் கல்வியாண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நிறைவடையும் வரையில் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
2017 ஆம் கல்வியாண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் இருபதாம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த பரீட்சை தொடர்பிலான அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
எனவே அப்பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகுப்புகள், செயலமர்வுகள், கருத்தரங்குகள், பரீட்சை மாதிரி வினாப்பத்திரம் அச்சிடுதல், விநியோகித்தல், மாதிரி வினாப்பத்திரம் தொடர்பில் பதாகைகள், துண்டுப்பிரசுரம் வெளியிடல், பரீட்சை தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் நடத்துதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளன.
குறித்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக பரீட்சை தொடர்பிலான சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இவ்விதிமுறைகளை மீறிச்செயற்படுபவர்கள் பற்றிய தகவல் அறிந்தவர்கள் பொலிஸ் திணைக்களத்தின் 119 என்ற அவசர இலக்கம் மற்றும் பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற அவசர இலக்கத்துடனும் 011 2784208, 0112784537 ஆகிய இலக்கங்களுடனும் தொடர்புகொண்டு முறையிடுமாறும் பரீட் சைகள் ஆணையாளர் நாயகம் குறித்த அறிக் கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM