(லியோ நிரோஷ தர்ஷன்)
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மற்றுமொரு உயர் நிலை அதிகாரியான மெக்கோன் பிலிப்ஸ் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் திங்கட்கிழமை இலங்கைக்கு வருகின்றார்.
செவ்வாய்கிழமை வரை நாட்டில் தங்கியிருக்கும் இவர், அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச தகவல் திட்ட பிரிவின் பணிப்பாளரான மெக்கோன் பிலிப்ஸ் அமெரிக்க ஜனாhதிபதி பராக் ஒபாமாவின் கண்காணிப்பின் கீழ் வெள்ளை மாளிகையில் செயற்படும் இணைய இராஜதந்திர பிரிவின் பிரதானியாகவும் செயற்படுகின்றார்.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை கடந்த வாரம் நடுப்பகுதியில் ஆரம்பித்த மெக்கோன் பிலிப்ஸ் நாளை இந்தியாவில் பல தரப்பு சந்திப்புகளில் கலந்து கொள்கின்ற நிலையில் நாளை மறுதினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
பல் துறைசார் உறவுகளை இலங்கையுடன் தீவிரப்படுத்தி வரும் அமெரிக்கா தனது இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகளை தொடர்ந்தும் இலங்கைக்கு அனுப்பி வருகின்றது.
அந்த வகையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச தகவல் திட்ட பிரிவின் பணிப்பாளரான மெக்கோன் பிலிப்ஸ் நாளை இலங்கை வருகின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM