பஸ்களுக்கு முன்னுரிமை வழங்கி பொதுச்சேவையில் ஈடுபடுகின்ற பஸ்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான தனியான வீதி அலகை வேறுபடுத்தும் திட்டம் இன்று தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது.
மேலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பகுதிகளில் சீ.சீ.ரி.வீ. இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் ஜீ.பீ.எஸ். தொழில்நுட்பம் வாயிலாக பஸ்கள் பயணிக்கும் ஒழுங்குமுறைகளும் கண்காணிப்புச் செய்யப்படவுள்ளன.
இதனால் ஏனைய வாகனங்களில் பயணிக்கும் நபர்களுக்கு அசெளகரியம் ஏற்பட வாய்ப்பிருந்தாலும் திட்டம் வழமையான பழக்கத்திற்கு வரும் வரையில் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும் என பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
திட்டம் அமுலுக்கு வரும் இடங்கள்
15 ஆம் திகதி தொடக்கம் மொறட்டுவ, குருச சந்தி தொடக்கம் கட்டுபெத்த வரையிலும், சவோய் திரையரங்கிலிருந்து பம்பலப்பிட்டி வரையிலும், 22 ஆம் திகதி தொடக்கம் கடுபெத்த சந்தியிலிருந்து மெலிபன் சந்தி வரையிலும், பம்பலப்பிட்டியிலிருந்து பித்தளை சந்தி வரையிலும் நடைமுறைக்கு வரும்.
29 ஆம் திகதி தொடக்கம் பத்தரமுல்லை பொல்துவ சந்தியிலிருந்து ஆயுர்வேத சந்தி வரையிலும், நகரசபை மண்டப வீதியிலிருந்து தும்முல்லச்சந்தி வரையிலும், டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் மருதானை தொழில்நுட்ப சந்தியிலிருந்து புறக்கோட்டை வரையிலும், கொழும்பு கோட்டையிலிருந்து கொம்பெனித்தெரு வரையிலும் நடைமுறைக்கு வரும்.
அடுத்த மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் கொம்பெனி தெரு தொடக்கம் புறக்கோட்டை வரையிலும், 30 ஆம் திகதி தொடக்கம் பொரளை தொடக்கம் மருதானை வரையிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM