தமிழீழ விடுதலைப்புலிகள் செயற்பட்ட காலப்பகுதியில் அதன் தலைவர்களில் ஒருவர் பயன்படுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட எம்.எம்.9 மில்லிமீற்றர் கைத் துப்பாக்கியை விற்பனை செய்ய முயன்ற இராணுவ வீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் (எஸ்.எப்.) ஸ்டாப் சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவரே இவ்வாறு பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராகம - மத்துமகல பகுதியில் வைத்து துப்பாக்கியையும் 6 தோட்டாக்களையும் இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் போர்வையில், பாதாள உலக குழுவொன்று என தம்மை காட்டிக் கொண்டு சென்ற பொலிஸாரே அந்த இராணுவ வீரரைக் கைது செய்ததாக பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த ஸ்டாப் சார்ஜன்ட்டுக்கு மேலதிகமாக அவருடன் இருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரையும் இதன் போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்ட புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரின் அருகில் இருந்து இந்த கைத்துப்பாக்கியையும் 6 தோட்டாக்களையும் குறித்த இராணுவ வீரர் மீட்டுள்ளதுடன் அதனை உயர் அதிகாரியிடம் கையளிக்காமல் வீட்டுக்கு கொண்டுவந்து பாதுகாத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சூது காரணமாக பெரும் தொகை பணத்தை இழந்து கடனாளியாக இருந்துள்ள குறித்த இராணுவ ஸ்டாப் சார்ஜன்ட், கடனை அடைக்க துப்பாக்கியை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளார். அதன்படியே தான் பாதுகாத்து வந்த புலித் தலைவர்களில் ஒருவரது துப்பாக்கியை விற்பனை செய்ய தீர்மானித்து அதற்கு இரண்டரை இலட்சம் ரூபா விலை நிர்ணயித்து பலரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் பொலிஸ் விசேட படையணியின் களனி பிரிவுக்கு அது தொடர்பில் தகவல் கிடைக்கவே, பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்திரவின் ஆலோசனைக்கு அமைய பாதாள உலக குழு உறுப்பினர்களாக தம்மை அடையாளப்படுத்தி கொண்டு பொலிஸார் அந்த துப்பாக்கியை கொள்வனவு செய்வதை போன்று சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM