முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக் ஷவிற்கு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டித்து இன்று காலை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மஹரகமை நகர சபை உறுப்பினர் காந்தி கொடிகார தலைமையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அரசியல் பழிவாங்கல் என சுட்டிக்காட்டியே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவினை பதவி நீக்குவதற்கு கூட்டு எதிரணியினால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதன் மறுதாக்கமாகவே முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. இன்று காலை. 9.00 மணிக்கு ஷிரந்தி ராஜபக் ஷ கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருகின்ற வேளையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM