உகண்டாவைச் சேர்ந்த முன்னாள் கிளர்ச்சிக் குழுவின் கட்டளைத் தளபதியான டொமினிக் உங்வென், பொதுமக்களைக் கொன்று சமைத்து உண்ண தனது கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டிருந்ததாக சர்வதேச விசாரணையாளர் கள் வியாழக்கிழமை தெரி வித்தனர்.
அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எல்.ஆர்.ஏ. (லோர்ட் ரெஸிஸ்ரன்ஸ் ஆர்மி) கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த முதலாவது உறுப்பினர் என்ற பெயரை பெறுகிறார்.
அவர் மீது சிறுவர்க ளைப் பாலி யல் அடி மைகளாக வும் படைவீரர்களாகவும்
மாற்ற பாலியல் பலாத்காரத்தை ஆயுதமாகப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
டொமினிக் மீது 70 போர்க் குற்றச்சாட்டுகளும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகில் மிகவும் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக இருந்த அவர், பல வருட கால தலைமறைவு வாழ்க்கையையடுத்து கடந்த வருடம் ஜனவரி மாதம் சரணடைந்தார். டொமினிக் தனது 10 ஆவது வயதில் பாடசாலைக்கு செல்லும் வழியில் எல்.ஆர்.ஏ. கிளர்ச்சியாளர்க ளால் கடத்தப்பட்டு கிளர்ச்சிப் படைவீரராக மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் காலப்போக்கில் அந் தக் கிளர்ச்சிக் குழுவின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக மாறிய டொமினிக்,, சிறுமிகளை பாலியல் அடிமைகளாகவும் சிறுவர்களை படைவீரர்களாகவும் பயன் படுத்தியதுடன் ஒரு சந்தர்ப்பத்தில் பொது மக்களைக் கொன்று சமைத்து உண்பதற்கு ஏனைய கிளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டிருந்ததாக கூறப்படுகிறது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM