ஹட்டன் பொலிஸார் மாவா போதைபொருள் மற்றும் என்.சி புகையிலை பேணிகள் ஒருதொகையை கைப்பற்றியதுடன் அதனுடன் தொடர்புடைய 6 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
ஹட்டன் பஸ்தரிப்பிட பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சட்டவிரோதமாக மாவா போதைப்பொருள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இன்று பகல் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சுற்றிவளைப்பின் போது 75 என்.சி.புகையிலை பேணிகள் உட்பட சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு பக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்ட ஒரு தொகை மாவா போதைப்பொருள் மற்றும் தயாரிப்பிற்கான பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் உட்பட போதைப்பொருளை பணம் கொடுத்து வாங்கிய 6 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM