உலகில் மிகவும் பிரபலமானதும் அதிகமானோரால் விளையாடப்படுவதுமான விளையாட்டாக திகழ்வது கால்பந்தாட்டம்தான்.
இலங்கையிலும் கிரிக்கெட்டை அடுத்து அதிகமானோரால் விளையாடப்படும் விளையாட்டு என்றால் அது கால்பந்தாட்டம்தான்.
இப்படியிருக்க இலங்கையில் கால்பந்தாட்ட தேசிய அணியொன்று இல்லை என்பது பெரும் சோகம்.
அண்மையில் பயிற்சியாளர்களாக செயற்பட்டு வந்த மூன்றுபேர் கொண்ட குழுவையும் கலைத்துவிட்டது இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம்.
அதற்கு சொன்ன காரணம் எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு சர்வதேச போட்டிகள் இல்லை அதனால் பயிற்சியாளர்களை நீக்குகிறோம் என்று.
இந்த முறை சரிதானா? தேசிய அணியொன்று இல்லாமல் ஒரு விளையாட்டை ஊக்குவிக்க முடியுமா?
உலக கால்பந்தாட்ட தரவரிசைப் படி பார்த்தால் இலங்கை அணி 197 ஆவது இடத்தில் இருக்கிறது. இதில் கடந்த காலங்களில் முன்னேற்றம் கண்டுள்ளதா என்றுப் பார்த்தாலும் இல்லை. பின்தங்கித்தான் வருகிறது.
இலங்கைக் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாக சபை பொறுப்பேற்று ஓரிரு மாதங்கள்தான் ஆகின்றது. அதனால் ஒட்டுமொத்தமாக புதிய நிர்வாக சபைக்கும் இந்த குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது.
ஆனாலும் கடந்த முறை தலைவராக இருந்த அனுர டி சில்வாதான் இம்முறையும் புதிய தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அதனால் தேசிய அணி ஒன்று இல்லாதமைக்கான காரணத்தை அவரிடம் கேட்கலாம்.
இத்தனைக்கும் 1995ஆம் ஆண்டு தெற்காசிய கால்பந்தாட்ட தொடரில் இலங்கை சம்பியன் பட்டம் வென்ற அணியின் முக்கியமான வீரராக திகழ்ந்தவர்தான் தற்போதைய இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராகவும் செயற்படுகிறார்.
எதிர்காலத்தில் இலங்கைக்கு சர்வதேச போட்டிகள் இல்லாத காரணத்தினால் பயிற்சியாளர்கள் குழுவை கலைத்துவிட்டோம் என்று சொன்னாலும்கூட தேசிய அணியொன்று இல்லாமலாக்கப்பட முடியுமா?
ஒவ்வொரு வீரருடைய உச்சபட்ச இலட்சியமே தேசிய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதுதான். இப்படியிருக்கையில் இலங்கையில் கால்பந் தாட்ட தேசிய அணி யொன்றை பேணாமல் விடுவது சரியா என்பது தான் எமது கேள்வியாக அமைகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM