வட கொரியா அமெரிக்காவுக்கு எதிராக எதையாவது மேற்கொள்ளுமாயின் அந்நாடு மிகவும் அஞ்சி நடுங்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க பிராந்தியமான குவாமுக்கு அருகில் 4 ஏவுகணைகளை ஏவத் திட்டமிட்டுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ள நிலையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். நியூ ஜெர்ஸியில் பெட்மினிஸ்டர் பிராந்தியத்திலுள்ள குழிப்பந்தாட்ட கழகத்தில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றுகையில் அவர் மேற்படி விமர்சனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“நான் கூறுவது என்னவென்றால் வட கொரியா நாம் நேசிக்கும் அல்லது நாம் பிரதிநிதித்துவம் செய்யும் அல்லது எமது நட்பு நாடுகள் அல்லது எம் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பில் சிந்திப்பது உள்ளடங்கலான ஏதாவது நடவடிக்கையை மேற்கொள்ளுமாயின் அந்த நாடு மிகவும் மிகவும் அஞ்சி நடுங்க நேரிடும்" என டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
அதேசமயம் அமெரிக்கா வட கொரியாவு டன் பேச்சு வார்த்தைகளை நடத்துவது குறித்து எப்போதும் கருத்திற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மற்றிஸ் வட கொரியாவுடனான ஆயுத மோதல் பெரு நாசத்தை விளைவிப்பதுடன் இராஜதந்திர ரீதியாக பாரிய விளைவையும் ஏற்படுத்துவதாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.
அதேசமயம் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கொம் டேர்ன்பல் தெரிவிக்கையில், அமெரிக்கா மீது வட கொரியாவால் தாக்குதல் நடத்தப்படுமானால் தனது நாடு அந்நாட்டுக்கு எதிரான போரொன்றில் இணைந்து கொள்ள தயார் நிலையில் உள்ளதாகக் கூறினார். அமெரிக்கா மீதான தாக்குதலொன்று நடத்தப்படும் பட்சத்தில் அமெரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட அன்சஸ் உடன்படிக்கையின் பிரகாரம் அமெரிக்காவின் உதவ அவுஸ்திரேலியா முன்வரும் என்று கூறிய மல்கொம் டேர்ன்பல், நாம் தாக்கப்படும் பட்சத்தில் அமெரிக்கா எமது உதவிக்கு வரும் என்று தெரிவித்தார்.
வட கொரியா கடந்த ஜூலை மாதம் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய இரு ஏவுகணைகளை ஏவிப் பரிசோதித்ததையடுத்து பிராந்தியத்தில் பதற்றநிலை அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மேற்படி ஏவுகணை பரிசோதனைகள் குறித்து வட கொரியாவுக்கு எதிராக மேலதி பொருளாதார தடைகளை அண்மையில் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM