மொனராகலை கலால் திணைக்கள அலுவலகத்தில் கடந்த 7 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு தேடுதல்களில 610 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றங்களினால் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து, அவர்களுக்கு 22 இலட்சத்து ஐம்பத்திரண்டாயிரத்து 200 ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக மொனராகலை கலால் திணைக்கள ஆணையாளர் சந்திரசிரி த சில்வா தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம்
திகதி தொடக்கம் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரையிலான ஏழு மாதங்களில் 494 சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டோம். அத்தேடுதல்களில் சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா பக்கட்டுக்கள் விற்பனை, ஹெரோயின் விற்பனை மற்றும் பாவனை உள்ளிட்ட கஞ்சா பயிரிட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் 610 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மொனராகலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கைது செய்யப்பட்டவர்களாவர்.
கைது செய்யப்பட்ட 610 பேரும், மாவட்டத்தின் நீதிமன்றங்கள் பலவற்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே, சுமத்தப்பட்ட குற்
றச்சாட்டுக்களை அவர்கள் ஏற்றுக்கொண் டதன் பேரில், மேற்படி 22 இலட்சத்து ஐம்பத்திரண்டாயிரத்து இருநூறு ரூபா அபராதமாக விதிக்கப்பட்டது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM