மனைவியை மிரட்டி நிர்வாணப் புகைப்படம் எடுத்து வெளி நபர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்கிய கணவனை புத்தல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தன் மனைவியை மிரட்டி அடித்து, துன்புறுத்தி நிர்வாணப்படுத்தி கையடக்கத் தொலைபேசியில் புகைப்படங்களை எடுத்து நண்பர்கள், உறவினர்கள், வெளியாட்களுக்கு என பகிர்ந்தளித்துள்ளார்.
கணவரின் இத்தகைய கொடுமைகளுக்குள்ளான 24 வயதுடைய மனைவி, கணவரின் கொடுமையைத் தாங்க முடியாமலும், தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் புத்தல பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் தன் மனைவி மீது அடிக்கடி சந்தேகப்படும் குணமுடையவர் என்றும் சந்தேக குணத்தால் மனைவியை காட்டு மிராண்டித்தனமாக பல தடவைகள் தாக்கியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவரை பொலிஸார் வெல்லவாய மஜிஸ்திரேட் நீதி மன்றில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கணவன், மனைவி, பொலிஸ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM