மட்டக்களப்பு மாவட்டத்தில் பயிர்ச்செய்கையில் களுதாவளைக் கிராமம் தொன்று தொட்டு முன்னணி வகித்துவருகிறது. அங்கு பிரதான உற்பத்திப் பொருளாக வெற்றிலை காணப்படுகிறது. இது பாகிஸ்தானியர்களால் பெரிதும் விரும்பிச் சுவைக்கப்பட்டுவருவதாகும். பாகிஸ்தான் இதனை இறக்குமதி செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. இச்சந்தர்ப்பத்தை தவறவிடாது அதனை ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துவருகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ். கணேசமூர்த்தி தெரிவித்தார்.
அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்,
எந்தவொரு உற்பத்திக்கும் தேவை இருக்க வெண்டும். தேவை இல்லாதபோது அது செல்லாக்காசாகிவிடும். களுதாவளை வெற்றிலைக்கு அந்த நிலை இற்றைவரைக்கும் ஏற்படவில்லை.
உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை கூடும்போதும், பயிர்ச்செய்கையின் விஸ்தரிப்புக் கூடும்போதும் தேவைக்கதிகமான உற்பத்தி ஏற்பட்டு அதன் மவுசுகுறைய இடமுண்டு.
இதனை தவிர்க்க வேண்டிய அவசிய தேவை களுதாவளை மக்களை நோக்கி அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ வந்துள்ளது.
பயிர்செய்கையில் ஈடுபடவேண்டாம் என்றோ, உற்பத்தியை மேம்படுத்த வேண்டாம் என்று கூறுவதோ பொருத்தமற்றது. அதுபல அநாவசிய கேள்விகளை தோற்றுவித்துவிடும். அவர்களின் ஜீவாதாரமே பயிர்த்தொழில்தான். அதை நிறுத்த முனைவது நியாயமாகாது. ஆதலால் அதனை ஏற்றுமதிப் பொருள் என்ற அந்தஸ்திற்கு உயர்த்திவிட்டால் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகிவிடும்.
அத்தோடு அச்செயற்பாடு நம் நாட்டிற்கு அந்நியச் செலாவணியையும் அழைத்துவரும். இதைவிட, இதைவைத்தே, களுதாவளைக் கிராமத்தை ஏற்றுமதிக்கிராமம் என்ற அந்தஸ்திற்கும் உயர்த்திவிடலாம். இவ் அந்தஸ்து அக்கிராமத்திற்கு அரசினால் வழங்கப்படுகின்ற பல நன்மைகளை கொண்டுவந்து சேர்க்கும். அதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனைநான் வேகப்படுத்தி வருகிறேன்.
இதனிடையே களுதாவளை வெற்றிலையின் மவுசை குறைப்பதற்கான பல தந்திரோபாயங்களை சில விஷமிகள் திரைமறைவில் செய்து வருவதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் பிரதானமாக இரசாயனப் பசளையையும், கிருமிநாசினிகளையும், களை நாசினிகளையும் பாவித்து உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வண்ணம் ஆலோசனை என்ற பெயரில் உபத்திரவத்தை புகுத்துவதாக அறியப்படுகிறது. இவ்வாறு செய்வதால் உற்பத்தி கூடலாம். ஆனால், அதன் சுவையின் தரம் குறைந்துவிடும்.
உற்பத்தியாளர்கள் உற்பத்திப் பெருக்கத்தில் கவனம் காட்டுவது போல்,அதன் தரத்தின் மீது அதீதகவனம் காட்ட வேண்டும். தரம் குறையும்போது ஏற்றுமதிப் பொருள் என்ற அந்தஸ்து இல்லாமற் போய்விடும். பிச்சை வேண்டாம் நாயைப் பிடித்தால் போதும் என்ற நிலையை வரவேற்க வேண்டிவரும் என்பதை உற்பத்தியாளர்கள் மனதில் ஏற்றம் செய்து கொள்ள வேண்டும்.
இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு களுதாவளையின் உள்ளூர் தலைமைகளுக்கு விளக்கிக் கூற இருக்கிறேன். அதேபோன்று இப்பகுதியின் விவசாயப் போதனாசிரியர்களின் இடைவிடாத ஆலோசனைகளும், ஊக்குவிப்பும் உற்பத்தியாளர்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. இவை கிட்டும் போது விசமத்தனமான அறிவுரைகள் உற்பத்தியாளர்களிடம் எடுபடாது என்று நம்புகிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM