அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார் எனவும் டொனால்ட் ட்ரம்ப் சிரியா மீது தாக்குதல் நடத்துவார் எனவும் சரியாக எதிர்வுகூறிய தன்னைத் தானே கடவுளின் தூதுவர் எனக் கூறிக் கொள்ளும் மறைஞானியொருவர், மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாவதற்கு ஒரு சில வாரங்களேயுள்ளன என தற்போது எதிர்வுகூறியுள்ளார்.
மேற்படி அணு ஆயுதப் போரானது கன்னி மரியாள் போர்த்துக்கல்லுக்கு விஜயம் செய்ததை குறிக்கும் நூற்றாண்டு விழாவையொட்டி ஆரம்பமாகும் என ஹொராசியோ வில்லேகாஸ் என்ற மேற்படி மறைஞானி தெரிவித்துள்ளார்.
கன்னி மரியாள் 1917 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதிக்கும் அதே ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் 6 வேறுபட்ட தருணங்களில் போர்த்துக்கல்லிலுள்ள 3 இடைய சிறுவர்களுக்கு காட்சியளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இரண்டாம் உலகப் போர் மற்றும் ரஷ்யாவிலான மாற்றம் என்பன குறித்து கன்னி மரியாளால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பின்னர் உண்மையில் நடந்தேறியதால் அவரது அந்தக் காட்சியளிப்புகள் உலகப் பிரபலம் பெற்றன.
போர்த்துக்கல் சிறார்களுக்கு கன்னி மரியாள் காட்சியளித்த ஆரம்ப தினமான மே மாதம் 13 ஆம் திகதிக்கும் இறுதி தினமாக ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதிக்குமிடையில் ஒருபோதும் இடம்பெறாத வகையில் அதிகளவு நாசத்தையும் மரணத்தையும் ஏற்படுத்தக் கூடிய போரொன்றுக்கு தயாராக இருக்க வேண்டியதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என ஹொராசியோ வில்லேகாஸ் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM