இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இரு இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை கடற்படையினரிடம் இந்திய கடலோரக் காவற்படை ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுப்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இரு மீனவர்களையும் விடுதலை செய்து நாட்டுக்கு மீள அனுப்புவது தொடர்பாக இலங்கை கடற்படைக்கும் இந்திய கடலோர காவற்படைக்குமிடையே நேற்று நல்லிணக்க பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
குறித்த நல்லிணக்க பேச்சு வார்த்தையின் போது இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட நாள் நல் உறவை பாதுகாக்கும் வகையில் கடந்த மே மாதம் 20ஆம் திகதி கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் இந்திய கடற்படை விடுவிப்பதாக உறுதியளித்ததோடு இலங்கையில் சட்ட விரோதமாக மீன் பிடியில் ஈடுப்பட்ட 77 இந்திய மீனவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பியமை தொடர்பாகவும் நன்றி பாராட்டப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM