கிழக்கு மாகாணத்தில் சகல ஆசிரியர் இடமாற்றங்களும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம். ரி. ஏ. நிசாம் அறிவித்துள்ளார்.
இதற்கான பணிப்புரையை அவர் சகல வலயக் கல்விப்பணிப்பாளர்களுக்கும் வழங்கியுள்ளார்.
மாகாண கல்வித்திணைக்களம் மற்றும் வலயக் கல்விப்பணிப்பாளர் மற்றும் தற்காலிக இடமாற்றங்கள் என அனைத்து ஆசிரியர் இடமாற்றங்களும் இவ்வாறு மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவக் காரணங்கள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்படும் இடமாற்றங்கள் தொடர்பில் அதற்கான நியாயமான காரணங்களுடன் மாகாண கல்வியமைச்சருக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஊடாக அனுமதி பெற்றபின் அந்த இடமாற்றத்தினை மேற் கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரிய இடமாற்றங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு சென்று அதிகாரிகளை ஆசிரியர்கள் சந்திப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மாகாண கல்விப்பணிப்பாளர் ஆசிரியர்களை கேட்டுள்ளார்.
வலய மட்டங்களில் ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்றுவருவதனால் பாடசாலைகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM