உறைய வைக்கும் குளிர் காலநிலை நிலவும் பின்தங்கிய ஆளரவமற்ற பிராந்தியமொன்றில் வெளியேற முடியாது சிக்கிக் கொண்ட நபர் ஒருவர் 3 நாட்களாக பூச்சிகளையும் பூக்களையும் உண்டு உயிர் வாழ்ந்த சம்பவம் மேற்கு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
அந்தோனி கொலிஸ் (32 வயது) என்ற மேற்படி நபர் தனது வாழ்க்கைத் துணையான டெபி புளோம்பீல்ட்டுடன் (39 வயது) டார்வின் பிராந்தியத்திலுள்ள கன்னிங் ஸ்டொக் ரூட் பிராந்தியத்துக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவர் கடந்த வாரம் வியாழக்கிழமை மாலை டெபியிடமிருந்து பிரிந்து ஆளரவமற்ற பிராந்தியத்தில் பாதை மாறிச் சென்றிருந்தார்.
அங்கிருந்து வெளியேறுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்து அவர் அந்தப் பிராந்தியத்துக்குள் வெளியேற முடியாது சிக்கிக் கொண்டார்.
இதனையடுத்து இரவு நேரப் பொழுதில் அங்கு நிலவிய உறைய வைக்கும் குளிரிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள அவர் ஆழமான குழியைத் தோண்டி அதற்குள் அங்கிருந்த குப்பைகளால் தனது உடலை மூடியவாறு படுத்து உறங்கி வந்துள்ளார். இத்துடன் அவர் பசியைப் போக்க அங்கிருந்த மலர்களையும் பூச்சிகளையும் உண்டு ள்ளார்.
டெபி தனது வாழ்க்கைத் துணையைக் காணவில்லை என பிராந்திய அதிகாரிகளிடம் செய்த முறைப்பாட்டையடுத்து, மீட்புக் குழுவினர் அந்தப் பிராந்தியத்தில் அந்தோனியை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து அந்தோனி கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார். உடல் உலர்வுக்குள்ளாகிய நிலையில் காணப்பட்ட அவர் சிகிச்சைக்காக உலங்குவானூர்தி மூலம் நியூமான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் உடல் நலம் தேறி வீடு திரும்பியுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM