அநுராதபுரம் கெக்கிராவ பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.
எப்பாவல, கடியாய, இலக்கம் ஒன்று என்ற கிராமத்திலேயே மேற்படி நபர் தனது வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளார். இப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விநியோகச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனையடுத்து களத்தில் இறங்கிய எப்பாவல பொலிஸார் மேற்படி நபரை கெக்கிராவ பகுதியில் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து 20 மில்லி கிராம் நிறையுடைய 29 ஹெரோயின் பைக்கட்டுக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. இதேவேளை இவரிடத்தில் போதைப்பொருளை விலைக்கு வாங்குவதற்கு வந்த ஒருவரையும் 2 பைக்கட் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் விற்பனையாளரிடத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது இவர் கொழும்பிலிருந்து போதைப்பொருள் பைக்கட்டுகளை எடுத்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இவருக்கு எதிராக இதற்கு முன்னரும் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வழக்கொன்று பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் நொச்சியாகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM