மினுவாங்கொடை நகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில், டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் புகை விசுறும் போது, உணவகங்கள் அனைத்தும் மூடப்படல் வேண்டும் என்றும், இதனை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மினுவாங்கொடை பொது சுகாதார வைத்திய அதிகாரி சஷீ பிரியதர்ஷனீ தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை பிரதேசத்தில் தற்போது டெங்கு நுளம்பை அளிக்கும் நோக்கில், பரவலாக புகை விசிறப்பட்டு வருகிறது. இந்நேரத்தில் கூட, சில உணவக உரிமையாளர்கள் உணவகங்களைத் திறந்து வியாபாரம் நடத்தி வருகின்றனர்.
சுகாதாரப் பிரிவினரால் டெங்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புகை விசுறும் போது, உணவுப் பொருட்களுக்கு சில நேரம் பாதிப்புக்கள் ஏற்பட இடமுண்டு. இதனாலேயே, உணவகங்களை மூடி விடுமாறு சகலரையும் அறிவுறுத்தியுள்ளோம். எனினும், இன்னும் சிலர் இதனைப் பொருட்படுத்தாது அசட்டை செய்து வருகின்றனர். இவ்வாறான உணவக உரிமையாளர்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதேவேளை, புகை விசிறப்படும் போது, இப் பிரதேசத்தில் மூடப்படாத உணவகங்களிலுள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM