இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதிற்குட்பட்ட கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாணம் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி சம்பியன் பட்டம் வென்றது.
கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியும், யாழ்ப்பாணம் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியும் மோதின.
இதில் இரு அணிகளும் போட்டிக்குரிய நேரத்தில் எந்தவித கோல்களையும் பெறவில்லை. இலங்கையின் முன்னணி கால்பந்தாட்ட பாடசாலை அணிகள் இரண்டும் இறுதியில் ஒன்றை ஒன்று எதிர்த்துப் போட்டியிட்டதால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது.
இரு அணிகளும் கோல் போடுவதற்கு பலத்த முயற்சிகளை எடுத்தபோதும் அது கைகூடவில்லை.
இறுதியில் பெனால்டி உதைமூலம் புனித ஹென்றியரசர் கல்லூரி 4 – 3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2017ஆம் ஆண்டுக்குரிய அகில இலங்கை சம்பியன் பட்டத்தை வென்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM