யாழில் தொடர் சுற்றிவளைப்பு ; பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால்  10 பேர் கைது 

Published By: Priyatharshan

06 Aug, 2017 | 03:27 PM
image

யாழ்ப்பாணம், வடமராட்சி துன்னாலைப்பகுதியில் இன்றைய தினம் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட 10 பேரை கைதுசெய்துள்ளனர்.

கடந்த காலங்களில் வடமராட்சிப் பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் கடத்தல் பிரச்சினைகள் மற்றும் அவற்றோடு தொடர்புபட்ட பொலிஸாருக்கும் மணல் கடத்தல் காரர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளுடன் தொடர்புபட்டவர்களை கைதுசெய்யும் வகையில் தொடர்ச்சியாக திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 

அவற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய தினம் அதிகாலை முதல் இடம்பெற்ற சுற்றிவளைப்பின்போது குறித்த 10 பேரும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்றைய தினம் மாலை, கோண்டாவில் பகுதியில் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தத்தவறிய குற்றிச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார்கள்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சமூகவிரோத குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்காக கொழும்பில் இருந்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பிரிவொன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகவும் அவர்கள் குறித்த குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்களை கைதுசெய்து அவர்கள் கைதுசெய்யப்படும் பகுதிக்கான பொலிஸ் நிலையங்களின் ஊடாக நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59