2016, 2017ஆம் கல்வியாண்டுக்கான பாடநெறிகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அந்தக் கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதிக்காக 71 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தார்கள்.
இவர்களில் 29 ஆயிரத்திற்கு மேலான மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் பொறுப்பில் இயங்கும் 14 பல்கலைக்கழகங்கள், மூன்று வளாகங்கள், ஐந்து உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் 109 பாடநெறிகள் நடத்தப்படுகின்றன. இவ்வாண்டு புதிதாக நான்கு பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, 2016, 2017 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்ததன் பின்னர் முதற்சுற்று வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது. தற்போது இரண்டாம் சுற்று வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு பாடங்களுக்காகவும் பல்கலைக்கழங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்கள் பற்றிய விபரங்கள் அடுத்த மாதம் பல்கலைக்கழங்களுக்கு அனுப்பப்படும் என்றும் பல் கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM