ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 தொட ரும், அதனைத் தொடர்ந்து இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரும் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய– இலங்கை அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட இ20 தொடரில் விளையாட முடிவு செய்துள்ளன.
இந்த மூன்று போட்டிகள் நடைபெறும் திகதி மற்றும் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டி பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி புனேவில் தொடங்குகிறது. பெப்ரவரி 12ஆம் திகதி டெல்லியில் 2ஆவது போட்டியும், பெப்ரவரி 14ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் 3ஆ-வது மற்றும் கடைசி போட்டியும் நடக்கிறது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அதன்பின் தற்போதுதான் இரு அணிகளுக்கும் இடையில் இருபதுக்கு 20 போட்டி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புனே மைதானம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் அதிகாரத்தை பெற்றது. அங்கு இதுவரை இரண்டு சர்வதேச போட்டிகள் தான் நடைபெற்றுள்ளன. தற்போது நடைபெற இருப்பது 2-ஆவது இருபதுக்கு 20 போட்டியாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM