தன்னை சினமூட்டிய சுற்றுலாப் பயணியை கரடியொன்று தனது புகலிடத்துக்குள் இழுத்துச் சென்று கடித்துக் குதறிய சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
எனினும் அந்த சுற்றுலாப் பயணி அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ளார்.
பெட்சபன் மாகாணத்திலுள்ள ஆலயமொன்றிலிருந்த கரடிகள் புகலிடத்தைப் பார்வையிடச் சென்ற நயிபம் புரொம்ரேரி (36 வயது) என்ற மேற்படி சுற்றுலாப்பயணி கயிறு ஒன்றைப் பயன்படுத்தி சோற்றைக் கொண்ட சட்டியொன்றை குறிப்பிட்ட கரடியின் புகலிடமான பள்ளத்தில் இறக்கியுள்ளார்.
இதன்போது அந்தக் கரடி சோற்றை உண்ண வரவும் அவர் சோற்று சட்டியை அங்கும் இங்கும் அசைத்து சோற்றுச் சட்டிக்காக அந்தக் கரடி அலைந்து திரிவதை தனது நண்பர்களுக்கு வேடிக்கை காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்..
இந்நிலையில் கடும் பசியுடன் இருந்த கரடி ஒரு கட்டத்தில் சினமடைந்து தனது பின்னங்கால்களால் எழுந்து நின்று நயிபம் புரொம்ரேரியை தாவிப் பிடித்து பள்ளத்திற்குள் இழுத்துள்ளது.
கரடியின் திடீர் தாக்குதலால் நயிபம் புரொம்ரேரி மயக்க நிலைக்கு செல்லவும் கரடி அவரைக் கடிக்க ஆரம்பித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கரடி மீது தடிகளை வீசியும் குளிர் நீரை ஊற்றியும் அதனை அங்கிருந்து பின்வாங்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களது அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
கரடி நயிபம் புரொம்ரேரியின் சதைப் பகுதியை தனது வாயால் கௌவி அவரை அங்கும் இங்கும் இழுத்துச் செல்ல ஆரம்பித்தது.
இந்நிலையில் வேறு வழி தெரியாத அங்கிருந்த சிலர், கரடியின் புகலிடமான பள்ளத்துக்குள் இறங்கி கம்புகள் மற்றும் தடிகளால் கரடியை நேரடியாக தாக்கவும் அந்தக் கரடி நயிபம் புரொம்ரேரிiயை விட்டு பின்வாங்க ஆரம்பித்தது.
இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட நயிபம் புரொம்ரேரியின் நண்பர்கள் மயங்கிக் கிடந்த அவரை அவசர அவசரமாக அங்கிருந்து மீட்டனர்.
தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த அவசர சேவைப் பிரிவினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நயிபம் புரொம்ரேரியின் உடல் நலம் தற்போது தேறி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி சம்பவத்தில் அவர் உயிர் தப்பியமை அதிசய சம்பவம் ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட ஆலயத்தின் மதகுருமார் மேற்படி கரடியையும் ஏனைய விலங்குகளையும் வளர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM