வவுனியா நகரப்பகுதியை அண்டியுள்ள மக்கள் குடியிருப்புக்களில் புகும் குரங்குகள் மக்களுக்கு பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா நகரையண்டிய கற்குழி, குட்செட்வீதி, வைரவபுளியங்குளம், உள்வட்ட வீதி, வவுனியா நகரம், குருமண்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளாந்தம் வந்து செல்லும் குரங்குள் அப்பகுதியில் உள்ள மக்களது வசிப்பிடங்களில் புகுந்து அவர்களது ஆடைகள், வீட்டு வளவில் உள்ள பொருட்கள், பயன்தரு மரங்களில் உள்ள காய்கள் மற்றும் பழங்கள் என்பவற்றை எடுத்துச் சென்று வீசுவதுடன் சிலவற்றை உணவாகவும் உட்கொள்கின்றன.
வீதிகளில் குரங்குளின் செயற்பாடு காரணமாக விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாய நிலையும் ஏற்பட்டுள்ளதுடன் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு இவை ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக குடிமனைகளில் நடமாடுகின்றன.
இதனால் தினமும் குரங்குகளுக்கு காவல் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் கவனம் செலுத்தி நகரப்பகுதியில் உள்ள குரங்குளை காடுகளுக்குள் விரட்டுவதற்கு அல்லது அவற்றைப் பிடித்து காடுகளுக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM