குரங்குகளின் அட்டகாசம் வவுனியாவில் அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம்

Published By: Priyatharshan

04 Aug, 2017 | 09:49 AM
image

வவுனியா நகரப்பகுதியை அண்டியுள்ள மக்கள் குடியிருப்புக்களில் புகும் குரங்குகள் மக்களுக்கு பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா நகரையண்டிய கற்குழி, குட்செட்வீதி, வைரவபுளியங்குளம், உள்வட்ட வீதி, வவுனியா நகரம், குருமண்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளாந்தம் வந்து செல்லும் குரங்குள் அப்பகுதியில் உள்ள மக்களது வசிப்பிடங்களில் புகுந்து அவர்களது ஆடைகள், வீட்டு வளவில் உள்ள பொருட்கள், பயன்தரு மரங்களில் உள்ள காய்கள் மற்றும் பழங்கள் என்பவற்றை எடுத்துச் சென்று வீசுவதுடன் சிலவற்றை உணவாகவும் உட்கொள்கின்றன. 

வீதிகளில் குரங்குளின் செயற்பாடு காரணமாக விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாய நிலையும் ஏற்பட்டுள்ளதுடன் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு இவை ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக குடிமனைகளில் நடமாடுகின்றன.

இதனால் தினமும் குரங்குகளுக்கு காவல் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் கவனம் செலுத்தி நகரப்பகுதியில் உள்ள குரங்குளை காடுகளுக்குள்  விரட்டுவதற்கு அல்லது அவற்றைப் பிடித்து காடுகளுக்குள்  விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54