முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவினால் கொள்வனவு செய்யப்பட்டு பின்னர் அது வேறொரு நபருக்கு விற்கப்பட்ட நவீன அதி சொகுசுக் கார் தொடர்பாக வழக்கிற்கு நாமல் ராஜபக்ஷ இன்று கடுவலை நீதி மன்றில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
குறித்த கார் கடுவலை பகுதியிலுள்ள வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றில் தரித்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே நிதி குற்ற விசாரணைப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்தே குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகளால் கடுவலை நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
இந் நிலையிலேயே இந்த வழக்கு இன்று கடுவலை நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது ,
குறித்த வாகனம் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால் சேதத்திற்குள்ளாகலாம் என்பதால் அதனை விடுவிக்க உத்தரவிடுமாறு பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கையை முன்வைத்தார்.
விசாரணைகள் முடிவடையாத நிலையில் குறித்த காரை விடுவிக்க ஆட்சேபனை தெரிவிப்பதாக முறைப்பாட்டாளர் தரப்பு எதிர் வாதத்தை முன்வைத்தது.
இரு தரப்பு கோரிக்கைகளையும் வாதப் பிரதி வாதங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம் மூன்று வாரங்களுக்குள் வாகனத்தை விடுவிக்கத் தேவையான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கானது எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM