ஒப்­பந்தம் தொடர்பில் எனது மனை­விக்­குத்தான் தெரியும் : ஆணைக்­கு­ழுவில் ரவி கரு­ணா­நா­யக்க

Published By: Priyatharshan

03 Aug, 2017 | 10:26 AM
image

மொனார்க் ரெசி­டன்ஸி மனைக்­கு­டி­யி­ருப்­பில்தான் தற்­போதும் வசிக்­கின்றோம். ஆனால் எனது மனைவி, குறித்த குடி­யி­ருப்பு தொடர்பில் யாருடன் ஒப்­பந்தம் செய்தார் என்றோ, எவ்­வ­ள­வுக்கு ஒப்­பந்தம் நடந்­த­தென்றோ எனக்கு தெரி­யாது. அது­மட்­டு­மல்­லாது எனது வீடு 4000 சதுர பரப்­ப­ளவு என ஆணைக்­கு­ழு­வில் தெரி­விக்­கின்­றார்கள். ஆனால் எனது வீட்டின் உண்­மை­யான பரப்­ப­ளவு 2000 சதுர பரப்­ப­ளவு மட்­டுமே யாகும் என்று அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க ஆணைக்­கு­ழுவில் சாட்­சி­ய­ம­ளித்தார்.

எனது மனை­வியும்,மகளும் ஒன்­பது கம்­ப­னி­க­ளுக்கு பணிப்­பா­ள­ராக செயற்­ப­டு­கின்­றனர். அவர்­க­ளுக்கு என்னை நம்­பி­யி­ருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அத­னால்தான் குறித்த மனைத் ­தொ­கு­தியின் ஒப்­பந்தம் தொடர்பில் என் மனைவியிடம் கேட்­க­வில்லை எனவும் நேர்­மை­யா­கவும் பொறுப்­பு­ட­னுமே அவர் செயற்­பட்டு வரு­வ­தா­கவும் கூறினார்.

பிணை­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசாரணை நேற்றுக் காலை 10 மணிக்கு ஆரம்பமானது. அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் சாட்­சிப்­ப­தி­வு­க­ளோடு விசாரணை ஆரம்­ப­மா­கி­யது. சுமார் 4 மணித்­தி­யா­லங்கள் அவ­ரிடம் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­டது.

பிணை முறி மோசடி தொடர்பில் விசா­ர­ணை ­களை செய்­வ­தற்­காக ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்பட்ட விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளான உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் கே.டீ. சித்­தி­ர­சிறி, பி.எஸ் ஜெய­வர்­தன மற்றும் ஓய்­வு­ பெற்ற பிரதி கணக்­காய்­வாளர் நாயகம் வேலுப்­பிள்ளை கந்­த­சாமி ஆகியோர் முன்­னி­லையில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

கொழும்பு - புதுக்­க­டையில் உள்ள நீதி­ய­மைச் சின் கட்­டட தொகு­தியில் அமைக்­கப்பட்­டுள்ள மேற்­படி விசா­ரணை ஆணைக்குழுவின் விசா­ரணை அறையில் இந்த விசா­ர­ணை­களை ஆரம்­பித்து முதலில் மேல­திக சொலி­சிட்டர் டப்­புல லிவேரர் நெறிப்­ப­டுத்­த­லுடன் சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

கேள்வி : உங­்க­ளது பெயர் என்ன?

பதில் : ரவி கரு­ணா­நா­யக்க

கேள்வி: வயது என்ன?

பதில்: 54

கேள்வி: மதம்?

பதில்: கத்­தோ­லிக்க கிறிஸ்­தவம்

கேள்வி: உங்­க­ளது கல்­வி­ த­கைமை, தொழில் என்ன?

பதில்: கணக்­காய்வு பட்­ட­யக்­கல்­வியை முடித்­துள்ளேன். தற்­போது முழு­நேர அர­சி­யல்­வா­தி­யா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் தற்­போது உள்ளேன்.

இந்­நே­ரத்தில் நான் ஒன்றை கூற விரு ம்­பு­கின்றேன். தொழில் ­கா­ர­ணங்­க­ளுக்­காக என்னால் இரண்டு முறை ஆணைக்­கு­ழு­வு க்கு வர முடி­யாமல் போய்­விட்­டது. இதற்­காக நான் மன்­னிப்பை கேட்­டு­கொள்­கின் றேன்.

கேள்வி: தற்­போது எங்கு வசிக்­கின்­றீர் கள்?

பதில்: 5 பி. எச்2 மொனார்க் ரெசி­டன்ஸி மனைத்­தொ­கு­தியில் ஐந்தாம் மாடியில் வசி த்து வரு­கின்றோம்.

கேள்வி: உங்­க­ளது மனைவி பெயர் என்ன?

பதில்: மேலா கரு­ணா­நா­யக்க

கேள்வி: உங்­க­ளுக்கு எத்­தனை பிள்­ளை கள் உள்­ளனர் அவர்­களின் பெயர் என்ன?

பதில்: மூன்று பெண் பிள்­ளைகள், ஒனேலா கரு­ணா­நா­யக்க, செனேலா கரு ­ணா­நா­யக்க, மினேலா கரு­ணா­நா­யக்க.

கேள்வி: எப்­போ­தி­லி­ருந்து மொனார்க் ரெசி­டன்ஸி மனைத்­தொ­கு­தியில் வசிக்­கின்­றீர்கள்?

பதில்: 2016 பெப்­ர­வரி நடுப்­ப­கு­தி­யி­லி ­ருந்து

கேள்வி: தற்­போது நீங்கள் வசிப்­பது நிரந்­தர முக­வ­ரியா அல்­லது தற்­கா­லிக முக­வ­ரியா?

பதில்: நிரந்­தர முக­வ­ரி தான்.

கேள்வி: உங்­க­ளது அர­சியல் அனு­பவம் பற்றி கூறுங்கள்?

பதில்: 5 முறை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­துள்ளேன். 25 வரு­டங்­க­ளுக்கு மேலாக அர­சி­யலில் இருக்­கின்றேன். பல்­ வேறு அமைச்­சு ­பொ­றுப்­புக்­க­ளிலும் இருந்­துள்ளேன்.

கேள்வி: நல்­லாட்சி அர­சாங்கம் எனும் பெய­ரு­டைய அர­சாங்கம் எப்­போது ஆட்­சி­ய­மைத்­தது?

பதில்: 2015 ஜன­வரி எட்டாம் திகதி

கேள்வி: நிதி­ய­மைச்­ச­ராக எப்­போது பொறுப்­பேற்­று ­கொண்­டீர்கள்?

பதில்: 2017 ஜன­வரி 27 ஆம் திகதி

கேள்வி: நிதி­ய­மைச்சர் என்ற வகையில் எங்­க­ளது கடமை பொறுப்­புக்கள் என்ன என நினைக்­கின்­றீர்கள்?

பதில்: நாங்கள் ஆட்­சி­ய­மைக்கும் போது இலங்­கையில் அதி­க­மான கடன்­சுமை இருந்­தது. இதனைப் போக்க முக்­கி­ய­மான பதவியில் நான் அமர்த்­தப்­பட்டேன். இந்­நாட்டு அபி­வி­ருத்­திக்­கா­கவும் ஊழ­லற்ற கட­னற்ற நாட்டை உரு­வாக்க தேவை­யா­னதை செய்­வதே எனது கட­மை­யாகும்.

கேள்வி: மத்­திய வங்­கி­யுடன் அல்­லது முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ர­னுடன் எவ்­வா­றான தொடர்பை பேணி வந்­துள்­ளீர்கள்?

பதில்: நான் ஒரு நிதி­ய­மைச்சர். அவர் மத்­திய வங்­கியின் ஆளுநர். அந்த ஒரு தொடர்பே எங்­க­ளிடம் காணப்­பட்­டது.

கேள்வி: மத்­திய வங்­கியில் நிதி­யியல் மற்றும் கடன்­படு துறைகள் பிர­தா­ன­மா­னவை. நிதி­ய­மைச்சர் என்ற வகையில் நீங் கள் எந்த தொடர்பை பேணி வந்­தீர்கள்?

பதில்: நிதி­ய­மைச்சர் நிச்­ச­ய­மாக நிதி­யியல் கொள்­கை­களில் மட்­டுமே தலை­யிட முடி யும் கடன்­படு துறை எனது அமைச்­சுக்கு அப்­பாற்­பட்­டது. அதே­வேளை அது மத்­திய வங்­கியின் தனித்த எல்­லைக்­குட்­பட்­டது.

கேள்வி: திறை­சே­ரி­யுடன் நீங்கள் கொண்­டுள்ள தொடர்பு எவ்­வா­றா­னது.

பதில்: திறை­சே­ரியில் 14 தொடக்கம் 15 திணைக்­க­ளங்கள் எனது அமைச்சின் கட்­டு ­பாட்­டுக்குள் இருந்­தது. அதனால் அந்த தொடர்பு மிகவும் நெருக்­க­மா­னது என கூற லாம். பொது­வாக நிதி­ய­மைச்சு என்­பது கூட்­டுப்­பொ­றுப்­புடன் கூடிய பல துறைகள் இணைந்து செயற்­படும் அமைப்­பாகும்.

கேள்வி: நீங்கள் நிதி­ய­மைச்­ச­ராக பதவி வகித்­த ­போது வர­வு­ – செ­ல­வுத் ­திட்­டத்தை முன்­வைத்­துள்­ளீர்­களா?

பதில்: ஆம் இரண்­டு ­முறை சமர்ப்­பித்துள் ளேன். அத்­தோடு நல்­லா­ட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­த­ பி­றகு 100 நாள் வேலைத்­திட்­டத்தின் கணக்­க­றிக்­கை­களும் என்னால் தயா­ரிக்­கப்­பட்­டன.

கேள்வி: அர்ஜுன் அலோ­சி­ய­ஸுடன் நீங் கள் கொண்­டுள்ள தொடர்பு எவ்­வா­றா­னது?

பதில்: எனது பெற்றோர், தாத்தா காலப்­ப­கு­தி­யி­லி­ருந்தே மகேந்­திரன் குடும்­பத்தை எங்­க­ளுக்கு தெரியும். அர­சியல் ரீதி­யா­கவும் பொரு­ளா­தார ரீதி­யா­கவும் அவர்­க­ளது குடும்­பத்­துடன் தொடர்பு இருந்­தது.

கேள்வி: அர்ஜுன் அலோ­சி­யஸை எப் ­போ­தி­லி­ருந்து உங்­க­ளுக்கு தெரியும்?

பதில்: அது எனக்கு ஞாப­க­மில்லை. ஆனால் எனக்கு 10 தொடக்கம் 15 வய­தி­லி­ருந்தே அவரது குடும்­பத்தை தெரியும்.

கேள்வி: அர்ஜுன் அலோ­சி­ய­சுடன் தனிப்­பட்ட தொடர்பு கொண்­டி­ருந்­தீர்­களா?

பதில்: இல்லை

கேள்வி: அர்ஜூன் அலோ­சி­ய­ஸுடன் வர்த்­தக அல்­லது வியா­பார தொடர்பு கொண்­டி­ருந்­தீர்­களா?

பதில்: இல்லை

கேள்வி: அலு­வ­லக அல்­லது சட்ட தொட ர்பு கொண்­டி­ருந்­தீர்­களா?

பதில்: இல்லை

கேள்வி: அப்­ப­டி­யென்றால் அர்ஜூன் அலோ­சி­ய­ஸுடன் என்ன தொடர்­புதான் உங்­க­ளுக்கு இருந்­தது?

பதில்: அவ­ரு­ட­னான தொடர்பை நெருக்­ கத்­துக்குள் கொண்­டு­ வ­ர­மு­டி­யாது. பாதை யில் நடக்கும் போதும் வியா­பாரம் மேற்­கொள்ளும் போதும் எத்­த­னையோ பேரை பார்க்­கின்றோம். ஆனால் அவர்­களை குறி த்த வரை­ய­றை­க­ளுக்குள் கொண்­டு ­வ­ர­மு­டி­யாது. 

கேள்வி: நீங்கள் நிதி­ய­மைச்­ச­ராகப் பதவி வகிப்­ப­தற்கு முன்னர் எத்­தனை கம்­ப­னி­களை தலை­மை ­தாங்­கி­னீர்கள்? அவை என்ன?

பதில்: ஒன்­பது கம்­ப­னி­களில் பதவி வகித் தேன். ஜி.டி.சி கம்­பனி, ஜி.எப்.எம் கம்­பனி, குளோபல் ஸ்டார்ஸ் ட்ரவல்ஸ் கம்­பனி, ஆர்.பி.எப்.சி கம்­பனி, வெக்லூம் பிரைவட் லிமிடட் உள்­ளிட்ட கம்­ப­னிகள்

கேள்வி: பங்­குச்­சந்­தையில் குறித்த கம்­ப­னி­களின் சார்பில் முத­லிட்­டுள்­ளீர்­களா?

பதில்: ஆம் 20 தொடக்கம் 30 சத­வீதம் வரையில் பங்­கு­களை நாம் முத­லி­டு­கின் றோம். 

கேள்வி: நாம் என்றால் யாரை சொல்­கின்­றீர்கள்?

பதில்: எனது குடும்­பத்தை (மனைவி, மகள்)

கேள்வி: ஏதே­னு­மொரு கம்­ப­னிக்கு வெளிநாட்டு கம்­ப­னி­யொன்­றி­னூ­டாக ஆலோ­சனை அல்­லது பங்­கு­தா­ரர்கள் உள்­ள­னரா?

பதில்: ஆம். குளோபல் லொஜிஸ்டிக் வோர்க்ஸ் கம்­பனி

கேள்வி: நீங்கள் நிதி­ய­மைச்­ச­ராகப் பொறுப்­பேற்ற பின்னர் அந்த கம்­ப­னி­களை யார் பொறுப்­பேற்றார்?

பதில்: எனது மனைவி மேலா கரு­ணா­நா­யக்க மற்­றும் எனது மகள் ஒனேலா கரு­ணா­நா­யக்க ஆகியோர்

கேள்வி: குளோபல் லொஜிஸ்டிக் டிரான்ஸ் ­பெ­ரன்சி கம்­ப­னியின் பணிப்பாளர் உங்­க­ளது மனைவி மட்­டுமா?

பதில்: இல்லை பிரித்­தா­னிய பிர­ஜை­யா­கிய லக்ஸ்மி காந்தன் மற்றும் அவ­ரது மகன் லக்ஸ்மி சங்கர்

கேள்வி: லக்ஸ்மி காந்தன் எங்கு பிறந்­தவர்?

பதில்: இந்­தி­யாவில் ஆனால் தற்­போது பிரித்­தா­னிய குடி­யு­ரி­மையை பெற்­றுள்­ளனர்.

கேள்வி: ஓ.எஸ்.எம் கம்­ப­னியின் விரி­வாக்கம் என்ன?

பதில்: ஒனேலா, செனேலா, மெனேலா

கேள்வி: அந்த கம்­பனி பணிப்­பாளர் யார்?

பதில்: எனது மனைவி

கேள்வி: அர்ஜுன் அலோ­சி­யஸை அடிக்­கடி சந்­திப்­பீர்­களா?

பதில்: ஆம்

கேள்வி: வீட்­டுக்கு வரு­வாரா?

பதில்: ஞாபகம் இல்லை. ஆனால் சந்­தித்­துள்ளோம்.

கேள்வி: நீங்கள் நிதி­ய­மைச்­ச­ராக இருந்­த­போது நிதி­ய­மைச்­சுக்கு வந்­துள்­ளாரா?

பதில்: ஆம் இரண்டு முறைகள் வந்­துள் ளார்.

கேள்வி: அப்­போது வியா­பார நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­ய­து ண்டா?

பதில்: ஒரு­போதும் இல்லை

அர்ஜுன் அலோ­சி­யஸின் தொலை­பேசி அழைப்­புக்கள் மீதான விசா­ரணை

மத்­திய வங்கி முறி விசா­ரணை முறி விசா­ ரணை தொடர்பில் பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் தலைவர் அர்ஜுன் அலோ­சி­யஸின் தொலை­பேசி, மடிக்­க­ணினி உள்­ளிட்ட அனைத்து தொடர்­பாடல் கரு­வி­க­ளையும் மத்­திய புல­னாய்வு பிரி­விடம் ஒப்­ப­டைக்­கு­மாறு ஜனா­தி­பதி ஆணைக்­குழு உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தது.

2015 ஆம் ஆண்டு தொடக்கம் பிணை ­முறி விசா­ர­ணைகள் முடியும் வரை­யான காலப்­ப­குதி முழு­வதும் பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் தலைவர் அர்ஜுன் அலோ­சி­யஸின் மேற்­கொண்ட அனைத்து வகை­யான தொடர்­பாடல் விட­யங்­க­ளை யும் பரி­சோ­திக்­கப்­பட்­டது.

இதன்­படி அவ­ரது அழைப்­புக்­களில் சுமார் 18000 க்கும் மேற்­பட்ட அழைப்­புக் கள் மற்றும் குறும்­ப­தி­வுகள் பதி­வு­செய்­யப்­பட்­டி­ருந்­தன. பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் தலைவர் அர்ஜுன் அலோ­சி­யஸின் தொலை­பெசி இலக்­க­மான 07777 77723 எனும் இலக்­கத்­தி­லி­ருந்து அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுடன் தொடர்­பு­பட்ட அழைப்­புக்கள் கேள்­விக்­குட்­ப­டுத்­தப் ­பட்­டன.

94766058862 எனும் இலக்­கத்­தி­லி­ருந்து நெய்ல் டி. சில்வா அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுடன் தொடர்பை பேணுங்கள் என்றும் கணக்­காய்வு அறிக்­கை­களை காண்­பிக்க கூறியும் கூறப்­பட்­டுள்­ளது பற்றி உங்­க­ளுக்கு தெரி­யுமா?

பதில்: தெரி­யாது. இந்த செய்­தியை இப்­போ­துதான் பார்க்­கின்றேன்.

கேள்வி: இது தொடர்பில் பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் தலைவர் அர்ஜுன் அலோ­சி­யஸின் உங்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்?

பதில்: இல்லை.

கேள்வி: 940714366650 எனும் இலக்­கத்­தி­லி­ருந்து பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் தலைவர் அர்ஜுன் அலோ­சியஸ் அனுப்­பி­யுள்ள குறுந்­த­க­வலில் தய­வு­செய்து இது தொடர்பில் ஆர்.கேவுக்கு தெரி­ய­யப்­ப­டுத்­துங்கள் என்றும் மூன்று மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கூறப்­பட்­டுள்­ளது. இது தொடர் பில் ஏதேனும் தெரி­யுமா?

பதில்: தெரி­யாது

கேள்வி: இந்த குற்ற ­த­க­வ­லின்­படி ஆர்.கே என்­பது யார்?

பதில்: யாரென எனக்கு தெரி­யாது

கேள்வி: உங்­களை யாரேனும் ஆர்.கே என அழைப்­பார்­களா?

பதில்: இல்லை. ரவி என்­பார்கள் கரு என்­பார்கள் இப்­படி யாரும் என்னை அழைப்­ப­தில்லை.

கேள்வி: பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத் தின் பங­்குகள் அல்­லது உடைமை சன்டே லீடர் பத்­தி­ரிகை நிறு­வ­னத்­துடன் தொடர்­பு­பட்­டுள்­ளதை அறி­வீர்­களா?

பதில்: இது தொடர்பில் எனக்கு தெரி­யாது. இதுதான் அது தொடர்பில் முத­லா­வ­தாக கேள்­விப்­ப­டு­கின்றேன்.

கேள்வி: 9440716527114 எனும் இலக்­கத்­தி­லி­ருந்து ஸடீவ்ஸ் சைமன் என்­பவர் அனுப்­பி­யுள்ள குறுந்­த­க­வலில் கேள்­வி­ம­னுப்­பத்­தி­ரத்தை ஒப்­ப­டை­யுங்கள் எனவும் இது தொடர்பில் ஆர்.கரு­ணா­நா­யக்க விடம் கூறுங்கள் எனவும் நட­வ­டிக்­கைகள் எடுங் கள் எனவும் கூறப்­பட்­டுள்­ளதே. அதன்­படி ஆர். கரு­ணா­நா­யக்க என்­பது யார்?

பதில்: தெரி­யாது. இந்த தக­வ­லுக்கும் எனக்கும் தொடர்பு கிடை­யாது.

கேள்வி: 9440716527114 எனும் இலக்­கத்­தி­லி­ருந்து ஸடீவ்ஸ் சைமன் என்­பவர் அனுப்­பி­யுள்ள குறுந்­த­க­வலில் பி.எம் அமெ­ரிக்க திறை­சே­றி­யுடன் கதைக்க சொன்னார். என்றும் ஆர்.கரு­ணா­நா­யக்­க­வுடன் தொட ர்பை பேணுங்கள் என­வும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதில் பி.எம் என்­பது யார்?

பதில்: தெரி­ய­வில்லை.

கேள்வி: இந்த குறுந்­ த­க­வல்­களில் பி.எம் என்­பது பிர­த­ம­ரையும் ஆர்.கே. என்­பது ரவி கரு­ணா­நா­யக்க என்­பதும் எங்­க­ளுக்கு தெரி­யாதா?

பதில்: நிச்­ச­ய­மாக இந்த தகவல்­களை என்­ னுடன் தொடர்­பு­ப­டுத்­து­வது முறை­யா காது.

கேள்வி: அடுத்­த­தாக சமூக வலைத்­த­ளங் கள் இந்த விட­யத்தை பெரி­தாக்­கு­கின்­றன. தய­வு­ செய்து இது தொடர்பில் கேளிக்கை கட்­டு­ரை­யொன்றை பத்­தி­ரி­கைக்கு வழங்­குங்கள் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது தொட ர்பில் ஏதேனும் தெரி­யுமா?

பதில்: தெரி­யாது.

கேள்வி: அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் கட­வுச்­சீட்டு தொடர்­பான விசா­ரணை

பதில்: 09 ஆம் திகதி ஜூன் மாதம் 2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2015 நவம்பர் 15 ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் 30 வெளிநாட்டு பய­ணங்கள், கலந்­து­ரை­யா­டல்கள் தொடர்பில் ஆராய்­வுக்­குட்­ப­டுத்­தப்­ பட்­டது. 

கேள்வி: அர்ஜுன் அலோ­சி­யஸை சிங்­கப்­பூரில் எப்­போ­தா­வது சந்­தித்­த­துண்டா?

பதில்: ஞாபகம் இல்லை

கேள்வி: 21 டிசம்பர் 2016 அன்­றி­லி­ருந்து 26 டிசம்பர் 2016 வரை­யிலும் நீங்கள் சிங்­கப்­பூரில் இருந்­துள்­ளீர்கள். இதன்­போது அர்ஜுன் அலோ­சி­யஸும் சிங்­கப்­புரில் இருந்­துள்ளார். இதன்­போது நீங்கள் அல்­லது உங்­க­ளது குடும்ப உறுப்­பி­னர்கள் யாரேனும் அவரை சந்­தித்­த­துண்டா?

பதில்: இல்லை

கேள்வி: சிங்­கப்­பூ­ருக்கு எதற்­காக அடிக்­கடி விஜயம் மேற்­கொண்­டுள்­ளீர்கள்?

பதில்: இவை அனைத்தும் எனது உத்­தி­யோ­க­பூர்­வ­மான பய­ணங்கள் இதில் எவ்­வி­த­மான ஒளிவு மறை­வு­களும் இல்லை.

மொனார்க் ரெசி­டன்ஸி தொடர்­மாடி குடி­யிருப்பு விற்­பனை

கேள்வி: மொனார்க் ரெசி­டன்சி மனையின் உரி­மை­யா­ளரின் பெயர் என்ன?

பதில்: விஜே­சூ­ரிய

கேள்வி: அனூக விஜே­சூ­ரி­ய­வுக்கு எத்­ தனை சகோ­த­ரர்கள் உள்­ளனர்?

பதில்: இரண்டு பேர். நிஹால் விஜே­சூ­ரிய மற்­றும் விஜித விஜே­சூ­ரிய

கேள்வி: விஜித விஜே­சூ­ரி­ய­வுடன்  குறித்த மனை­கொள்­வ­னவு தொடர்பில் பேச்­சு­வார்­ததை நடத்­தி­னீர்­களா?

பதில்: இல்லை.

கேள்வி: அனூக விஜே­சூ­ரி­யவின் மகள் அனிகா அனூக விஜே­சூ­ரி­யவின் மகளை தெரி­யுமா?

பதில்: தெரியும் ஆனால் கதைத்­த­தில்லை. 

கேள்வி: தற்­போது இருக்கும் குடி­யி­ருப்பு 4000 சதுர அடியை கொண்­டதா?

பதில்: இல்லை. 2000 சதுர அடி மட்­டுமே கொண்­டது. இது மிக­வும் பொய்­யான கூற்­றாகும். எனது வீட்டில் மூன்று படுக்­கை­ய­ றை­களும் வர­வேற்­பறை மட்­டுமே உள்­ளது.

கேள்வி: அந்த வீட்டை வாங்கியது யார்?

பதில்: எனது மனைவி

கேள்வி: வீட்டு ஒப்பந்தத்தை நீங்கள் பார்த்தீர்களா?

பதில்: இல்லை. எனது மனைவியின் கம்பனியின் பணிப்பாளர்களினாலேயே இந்த வீடு வாங்கப்பட்டது.

கேள்வி: இவ்வீட்டை கொள்வனவு செய்வதற்கு எப்படி பணம் கிடைத்தது?

பதில்: அது எனது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது கம்பனியின் பணிப்பாளர்களின் அனுமதியின் பேரில் கொள்வனவு செய்தார்கள்.

கேள்வி: அப்படியாயின் அவர்கள் யாரு டன் பேரம் பேசினார்கள் எவ்வளவுக்கு கொள்வனவு செய்தார்கள் என்பது தொடர் பில் உங்களுக்கு தெரியாதல்லவா?

பதில்: தெரியாது

கேள்வி: ஒரு நிதியமைச்சர் என்ற வகை யில் பணக்கூற்று தொடர்பான அனைத்து பொறுப்பிலும் உள்ள நீங்கள் ஆவணங்களை பார்வையிடவில்லை என்பதுவும் இது தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட நிதி கொடுக் கல் வாங்கல்கள் தெரியாது என கூறுவது வேடிக்கையாக உள்ளதே?

பதில்: அப்படியில்லை. நான் நிதியமைச் சராக காலையில் 7 மணிக்கு அமைச்சுக்கு: சென்று 10 மணிக்கு தான் வீடு திரும்புவேன். இதனை குறிப்புகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாது எனது மனைவி மற்றும் மகள் என்போர் சிறப்பாக வியாபாரத்தை கவனித்து வரு கின்றனர். அவர்களுக்கு முடிவு எடுக்க முடியும்.

கேள்வி: இது தொடர்பில் உங்களது மனைவி எதுவும் உங்களிடம் கலந்துரை யாடிய தில்லையா?

பதில்: இல்லை.

கேள்வி: நீங்கள் உண்மையில் கூட்டுக் குடும்பத்துடன்தானே வாழ்கின்றீர்கள்?

பதில்: ஆம்

மொனார்க் ரெசிடென்ஸி மனைத் தொகுதியை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட 155 மில்லியன் நிதி தொடர்பில் உங்களது மனைவியின் கம்பனி யின் வரவிலோ அல்லது செலவிலோ பதி விடப்படவில்லையே 

அது பற்றி எனக்கு தெரியாது. அதை என் மனைவியிடம் தான் கேட்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08