இனிவரும் காலங்களில் ஞாயிற்றுக்கிழமை, போயா விடுமுறை தினங்களில் 2 மணிக்கு முன்பாக தனியார் வகுப்புக்களை நடத்துவதை தடைசெய்வதற்கான சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச் சர் விஜேதாஸ ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்க்கைக்கு 40 ஆண்டுகள் பூர்த்தியாவதையிட்டு மஹரகமையில் இடம்பெற்ற கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்த அளவிற்கு ஒரு மனிதர் கற்றிருந்தாலும் அவர்கள் சமயம் பற்றி அறிந்திருக்காவிடின் அதனில் பயன் இல்லை. அறநெறிக்கல்வியை கற்காவிட்டால் தாம் கற்ற மற்றைய கல்வியினை சமூகத்திற்கு பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாமல் போகும்.
அதேபோல் அறநெறிக் கல்வி கற்றவர்களால் சமூகத்திற்கு என்றும் பாதிப்பு கிடையாது. அவர்களால் நன்மை மாத்திரமே கிடைக்கும். எனவே அதற்கான சூழலை சமூகத்தில் உருவாக்கி கொடுப்பதற்கான சட்டமூலத்தினை அமுல்படுத்துவது தொடர்பில்துறைசார்ந்தவர்களுடன் பேசியுள்ளோம்.
அதற்கமைய ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புக்களை இரத்துச் செய்யும் வகையிலான சட்டமூலத்தினை விரைவில் பாராளுமன்றத்தில் அமுல்படுத்துவோம்.
இது தொடர்பில் தனியார் கற்கை நிறு வனங்களின் ஆசிரியர்களுடன் பல சுற் றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள் ளதுடன் மேற்படி தினங்களில் மாணவர் களை அறநெறி பாடசாலைகளுக்கு அனுப்புமாறும் மாணவர்களுக்கு அறிவு றுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM