கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர், இராணுவ அதிகாரி ஆகியோருக்கு முன்மொழிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு உரித்தான முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக் காணி விடயமாக கடந்த மாதம் 20ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பப்பட்ட தங்களது கடிதம் தொடர்பானது என்ற தலைப்பிடப்பட்ட அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காணி விடயம் தொடர்பாக நான் பாதுகாப்புச் செயலாளருடனும், இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரியுடனும் பொதுவாகக் கலந்துரையாடியுள்ளேன். தங்கள் கோரிக்கை தொடர்பாக அவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளபோதும், தங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் காலவரையறையைப் பொறுத்தமட் டில் சில மட்டுப்படுத்தல்களை அவர்கள் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. அதன்படி, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பி வரவேண்டிய தேவையையும், நல்லிணக்கச் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தையும் கருத்
தில் கொண்டு காலவரையறை தொடர்பில் விட்டுக்கொடுத்து ஒத்துழைக்கும்படி நான் அவர்களைக் கோரியுள்ளேன்.
அதற்கமைவாக, முடிந்தவரை விரைவாக இக்காணிகளை முறைப்படி விடுவிக்கும்பொருட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அவர்களது ஒப்புதல்களை வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளருக்கும், இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரிக்கும் தங்கள் கோரிக்கையை முன்னளிக்கின்றேன்.
மேலும், தங்களது கோரிக்கை தொடர்பாக நான் ஜனாதிபதிக்கும் வாய்மொழி மூலம் தெரியப்படுத்தியுள்ளதோடு, அவரும் இடம்பெயர்ந்தோர் விடயத்தில் உதவுவதற்குத் தானும் அக்கறையோடு செயற்படுவதாகத் தெரியப்படுத்தினார்.
எதிர்காலத்தில் இதுவிடயமாக நாங்கள் மேற்கொள்ளவுள்ள இணக்கச் செயல்முறைகள் பற்றி நான் தங்களுக்கு அறியத்தரும் வரை என்னுடன் பொறுமையுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றுள்ளது. கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பில் கடந்த 26ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடியிருந்ததன் பின்னரே இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் பிரதிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்புத் தலைமை அதிகாரி ஜெனரல் ஏ.டபிள்யூ.ஜே.சி. டி சில்வா, இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரி லெப். ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் தீர்வொன்றினை பெறும் முகமாக, ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருட னான கலந்துரையாடல்களை நாம் தொடர்ந்தும் மேற்கொள்வோம் என எதிர்க்க ட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலை வருமான சம்பந்தன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM