நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறிருக்கையில் ஒரு சிலருக்கு மாத்தி ரம் குறுகிய காலத்தில் அதிகாரத்திற்கு வரவேண்டிய தேவை உள்ளது. எனவே, இவர்கள் நாட்டு மக்கள் பூரண ஜனநாயக சுதந்திரத்தினை நுகர்வதற்கு இடை யூறு செய்கின்றார்கள். 3 வருடங்களின் பின்பே அவர் கள் அதிகாரம் குறித்து சிந்திக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கை துறைமுக அபி்விருத்தி அதிகாரசபையின் 38 ஆண்டுபூர்த்தி நிகழ்வில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று நாட்டில் சிலர் விரைவில் அதிகாரத்தை பெறும் அவாவில் செயற்படுகின்றார்கள். அவர்கள் அனைவரும் 3 வருடங்களின் பின்னர் தான் அதிகாரம் குறித்து சிந்திக்க முடியும். அதுவரையில் தற்போதைய அரசாங்கத்தின் பயணம் தொடரும்.
இன்று அரசாங்கம் நாட்டிலுள்ள மக்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்கின்றது. அதற்கமைய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பூரண ஜனநாயக சுந்திரத்தினை அனுபவிக்க மேற்படி அதிகார அவாவில் இருக்கின்றவர்கள் இடையூறு செய்கின்றார்கள்.
அதனால் சிறு குழுக்களின் தேவைக்காக மாத்திரம் நாட்டு மக்களின் ஜனநாய உரிமைகளை கண்டுகொள்ளமால் செயற்பட முடியாது. புதிய அரசியலமைப்பிலும் கூட நாட்டில் வாழும் சகல மக்களினதும் அரசியல் மற்றும் தேர்தல் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும்.
துறைமுக ஒப்பந்தம் மேலும் இன்று உலகநாடுகளின் துறைமுகங்களுடன் போட்டியிடும். அளவிற்கு எமது நாட்டு துறைமுகங்கள் வலுவடைந்துள்ளதையிட்டு துறைமுக சேவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதுடன் அவர்களின் வரப்பிரசாதங்களும் அதிகரிக்கப்படும்.
வரலாற்றின் அடிப்படையில் பார்க்கின்ற போது ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு பொருளாதார செயற்பாடுகள் சார்ந்தவர்களின் செயற்பாடுகள் காரணமாக எமது நாடு உலக நாடுகள் மத்தியில் சென்றது. எனவே துறைமுகம்தான் உலக நாடுகள் மத்தியில் எம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சாதகமான காரணமாக அமைந்தது.
அதனால்தான் அம்பாந்தோட்டை துறைமுகத்தினை பலன்மிக்க ஒன்றாக மாற்றுவதற்கான ஒப்பந்தத்தினையும் நாம் கைசாத்திட்டுள்ளோம். கடந்த அரசாங்கமும் இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தினை கைசாத்திடவிருந்தது.
அந்த அரசாங்கத்தினை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நானும் இருந்த போது குறித்த ஒப்பந்தம் நாட்டிற்கு மிக பாராதூரமான ஒன்றென நான் அறிவேன். அதனால் அந்த ஒப்பந்தத்திற்கு அப்போதே நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.
தற்போது அவ்வாறான விடயங்களை மாற்றியமைத்து அம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கை கடற்படையின் பூரண மேற்பார்வையின் கீழ் சீன நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் ஒப்பந்தத்தில் பரிந்துரை செய்துள்ளோம்.
மேலும் இந்நாட்டின் ஒரு அடி நிலத்தினை கூட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிலவுரிமையுடன் வழங்கமாட்டோம் என் அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரமே மேற்படி ஒப்பந்நதம் கைசாத்திடப்பட்டது.
இதற்கு முன்னைய அரசாங்கங்கள் எவையும் இவ்வாறான ஒப்பந்தங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காத போது நான் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து வெளிப்படையாக செய்ய கூறியிருந்தேன்.
கடந்த அரசாங்கத்தில் இருந்த போது மேற்படி ஒப்பந்தத்தி்ல் இருந்த பாராதூரமான கருத்துகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ள காரணத்தினாலேயே எதிரணியினர் துறைமுக ஒப்பந்தம் தொடர்பிலான பாராளுமன்ற அமர்வில் விவாதங்களை முறையாக முன்னெடுக்கவில்லை என்பதையும் நான் அறிவேன்.
எனவே கொழும்பு துறைமுகத்தை கடன் சுமையிலிருந்து மீட்கும் வகையிலான மேற்படி ஒப்பந்தத்தின் பின்னர் கொழும்பு கிழக்கு இறங்குதுறையினையும் அபிவிருத்தி செய்வதோடு அதனை முழுமையாக இலங்கையின் கீழேயே தக்கவைத்துக்கொள்வோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM