முன்னாள் மத்திய வங்கி ஆளு நர் அர்ஜுன மகேந்திரன் வாய்வார் த்தைகளின் மூலமாக என்னை அச்சுறுத்தினார், கத்தினார். எனது நேர்மையான செயற்பாடுகளுக்கு ஆளுநர் இடையூறு விளைவித்த மையினாலேயே அவர் என்னை அச்சுறுத்தினாரென சாட்சிய மளித் தேன் என மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆர்.ஏ.ஜெயலத் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் ஊழியர் சேம லாப நிதியத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரதான இரு இட மாற்றங்கள் மிகவும் அநீதியானவை. அவர்களை இடமாற்றும் தேவை இருக்கவில்லை. இவை அனைத் தும் முன்னாள் மத்திய வங்கி ஆளு நர் அர்ஜூன மகேந்திரனின் தலைமையிலேயே நடைபெற்றன. அதன் பின்னர் அவர் என்னை மிரட்டும் தொணியில் கண்டித்தார் என நேற்று முன்தினம் ஆர். ஏ ஜெயலத் சாட்சியமளித்திருந்தார்.
குறித்த சட்சியம் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் சார்பில் வாதாடிய சட்டத்தரணி நேற்று கேள்வியெழுப்பியிருந்தார். “நேற்று ( நேற்று முன்தினம்) கூறியதன்படி அச்சுறுத்தினார் அல்லது கண்டித்தார் என்றால் அர்ஜூன மகேந்திரன் உங்களை துப்பாக்கியால் சுட்டாரா அல்லது அடித்தாரா” என சட்டத்தரணி கேள்வியெழுப்பியபோதே “என்னை பொறுத்தவரையில் நேர்மையான ஒரு விடயத்துக்காக முறையற்று கதைப்பாராயின் அதுவும் எனக்கு அச்சுறுத்தல்தான் என மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆர். ஏ ஜெயலத் சாட்சியமளித்தார்.
பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆர். ஏ ஜெயலத்தின் சாட்சிப்பதிவுகளோடு நேற்றைய விசாரணை ஆரம்பமாகியது. இதன்போது அர்ஜூன் அலோசியஸின் சட்டத்தரணியாக ரணவக்க முன்னிலையாவதாக முதலில் மனுவொன்றை சமர்ப்பித்து ஆஜரானார்.
பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்திரசிறி, பி.எஸ் ஜெயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.
முதலில் மேலதிக சொலிசிற்றர் ஜெனரல்; பெர்னான்டோவின் நெறிப்படுத்தலுடன் எதிர்த்தரப்பு சாட்சி விசாரணைகள் ஆரம்பமாகின.
கேள்வி: உங்களது கல்வித்தகைமை என்ன?
பதில்: இளங்கலைமாணி பட்டத்தை வர்த்தகத்திலும் முதுமானி பட்டத்தை வணிகத்துறையிலும் ஐக்கிய அமெரிக்காவின் கென்சாஸ் பல்கழைக்கழகத்தில் முதுமானி பட்டத்தையும் முடித்துள்ளேன்.
கேள்வி: முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன மகேந்திரனின் காலத்துக்கு முன்னர் ஒரே மாதத்தில் அதிகளவில் பங்குகள் விற்கப்பட்டுள்ளதா?
பதில்: ஆம். அவ்வாறு நடைபெற்றுள்ளது.
கேள்வி: மத்திய வங்கியின் முன்னறை, இடைநிலை அறை, பின்னறையில் இடம்பெற்ற இடமாற்றங்கள் அனைத்தும் உங்களுக்கு தெரியும் அல்லவா?
பதில்: ஆம் தெரியும்.
கேள்வி: அப்போது ஏன் முன்னறையில் பணிபுரிந்த உதயசீலன், பதுமநாதன் ஆகியோரின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தீர்கள்?
பதில்: எனது திணைக்களத்தில் அவர்கள் மிகவும் திறமையாக செயற்பட்டு வந்தார்கள். கல்வித்தரமும் அதிகமாக இருந்தது. அத்தோடு அவர்களை இடமாற்றம் செய்வதற்கான எந்தவொரு தேவையும் அப்போது ஏற்பட்டிருக்கவில்லை.
கேள்வி:இடமாற்றம் செய்வதற்கான தேவையை நீங்கள் எவ்வாறு தீர்மானிப்பீர்கள்?
பதில்: நான் தீர்மானிக்கவில்லை. எனது அபிப்பிராயத்தை கூறினேன்.
கேள்வி: அவ்வாறுதானே முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன மகேந்திரனும் தனது கருத்தை தெரிவித்திருப்பார்.
பதில்: எனது கருத்தை அவர் கேட்கவில்லை
கேள்வி: எனது கருத்தை கேட்கவில்லை என்பதற்கும் அச்சுறுத்தினார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளதல்லவா?
பதில்: வாய்வார்த்தைகளின் மூலமாக என்னை அச்சுறுத்தினார். எனது செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களை நான் அச்சுறுத்தினார் என்றுதான் கூறுவேன். அத்தோடு பலமுறை ‘நான் சொல்வதை செய்” என கண்டிப்புடன் கூறியிருக்கின்றார். எனவே அது எனக்கு அச்சுறுத்தல்தான்.
கேள்வி: கேள்விமனு மற்றும் விலைமனுக்கோரல் தொடர்பில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பத்திரங்களை பரிசீலனை செய்வது நீங்களா?
பதில்: ஆம்
கேள்வி: இது தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் ஏதேனும் கட்டளையிட்டாரா?
பதில்: ஆம். அனைத்து பத்திரங்களையும் அவரது அறைக்கு அனுப்பாமல் அவசியமான அறிக்கைகளை மட்டும் அனுப்புமாறு கூறினார்.
கேள்வி: அந்த அறிக்கைகளில் இறுதி கையொப்பமிடுவது யார்?
பதில்: நான்தான்.
கேள்வி: அப்படியானால் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் கேள்வி கேட்க வேண்டுமானால் உங்களிடம்தானே கேட்க வேண்டும்?
பதில்: ஆம்
கேள்வி: அதனை செய்தமைக்கு அச்சுறுத்தலாக நினைப்பது எவ்வாறு முறையாகும்?
பதில்: எனது பணியில் நான் தவறிழைத்தில்லை. எனக்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்களும் திறமையானவர்கள். எனவே அவர்களை இடமாற்றம் செய்தமையாலேயே நான் அவ்வாறு கூறினேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM