உறவினர்கள் போல் அழைத்து உள்நுழைந்தோரால் வீட்டிலிருந்த மகளின் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் தாய் மீது கத்தி வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று நேற்று இரவு வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொள்ளைச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வவுனியா கண்டி வீதி, மூன்றுமுறிப்பு பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் தமது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது வீட்டு வாசலில் உறவினர்கள் அழைத்தது போல் அழைத்து இரு இளைஞர்கள் உள்நுழைந்துள்ளனர்.
இந்நிலையில் அவ்விடத்திற்கு சென்ற மகளிடம் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்த சந்தர்ப்பத்தில் மகள் கூக்குரலிட்டுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தாயார் ஓடி வர தாயாரான பரமசிவம் ஷ்கந்தலோஜினி (வயது 60) என்பவரின் கையை வெட்டி விட்டு மகளின் ஒரு பவுண் சுமார் 48 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு உறவினர்கள் போல் அழைத்து உள்நுழைந்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பித்துச் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் தங்களை இனங்காட்டிக் கொள்ளாத வகையில் முகத்தை மறைத்து கறுப்புத் துணியால் கட்டியிருந்ததாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.
கத்திவெட்டுக்கு இலக்கான தாயார் தற்போது வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
வவுனியா பொலிசார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM