உறவினர்போன்று வந்தோரால் மகளின் சங்கிலி அறுப்பு : தாய் மீது கத்திவெட்டு 

Published By: Priyatharshan

02 Aug, 2017 | 09:41 AM
image

உறவினர்கள் போல் அழைத்து உள்நுழைந்தோரால் வீட்டிலிருந்த மகளின் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் தாய் மீது கத்தி வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று நேற்று இரவு வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொள்ளைச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கண்டி வீதி, மூன்றுமுறிப்பு பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் தமது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது வீட்டு வாசலில் உறவினர்கள் அழைத்தது போல் அழைத்து இரு இளைஞர்கள் உள்நுழைந்துள்ளனர்.

இந்நிலையில் அவ்விடத்திற்கு சென்ற மகளிடம்  அணிந்திருந்த தங்கச் சங்கிலியை  அறுத்த சந்தர்ப்பத்தில்  மகள் கூக்குரலிட்டுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தாயார் ஓடி வர தாயாரான பரமசிவம் ஷ்கந்தலோஜினி (வயது 60) என்பவரின் கையை வெட்டி விட்டு மகளின் ஒரு பவுண் சுமார் 48 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு உறவினர்கள் போல் அழைத்து உள்நுழைந்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பித்துச் சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் தங்களை இனங்காட்டிக் கொள்ளாத வகையில் முகத்தை மறைத்து கறுப்புத் துணியால் கட்டியிருந்ததாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.

கத்திவெட்டுக்கு இலக்கான தாயார் தற்போது வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

வவுனியா பொலிசார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33