தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தை, இலங்கையின் வர்த்தகத் துறையினரிடையே பிரபல்யப்படுத்தும் நோக்கிலும், நிறுவனங்களிடையே புரிந்துணர்வை அதிகரிக்கும் வகையிலும், இலங்கை வர்த்தக கரப்பந்தாட்ட சங்கம், வருடாந்த மேர்கண்டைல் கரப்பந்தாட்ட சுற்றுத் தொடரை இம்முறையும் ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த வருடம் 100 இற்கும் மேற்பட்ட அணிகள் இச்சுற்றுத் தொட ரில் கலந்து கொண்டன. இவ்வருடம் அதையும் தாண்டிய பங்களிப்பினை சங்கம் எதிர்பார்க்கின்றது.
ஆண்,- பெண் இரு பாலாரும் பங்குபற்றும் இப்போட்டித் தொடரானது, தேசிய விளையாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைய இடம்பெறுகின்றது.
ஆரம்பகட்ட சுற்றுப்போட்டிகள் மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் எதிர்வரும் 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டிகள் மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளக அரங்கில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெறும்.
இதில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற, போட்டியில் கலந்து கொள்ளும் ஊழியர்கள் குறித்த நிறுவனத்தில் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களேனும் பணியாற்றியிருக்க வேண்டும்.
சுற்றுத் தொடர்கள் சுப்பர் லீக், சம்பியன் மற்றும் டிவிஷன் ஏ ஆகிய மூன்று பிரிவுகளில் இடம்பெறும்.
மொத்தப் பரிசுத் தொகை 1.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். மிகச் சிறந்த வீராங்கனைக்கு ஸ்கூட்டி ஒன்றும், வீரருக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றும் பரிசாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 2017 ஆகஸ்ட் 9 ஆகும். மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள - 0710682682, 0776485456 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM