பாகிஸ்தானுக்கு வெற்றிலை ஏற்றுமதி செய்பவர்கள் எதிர்கொள்ளும் தீர்வை தொடர்பான பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இலங்கைக்கான பதில் பாகிஸ்தான் தூதுவரிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெற்றிலையை இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, அந்த நாடு இறக்குமதி வரியை மேலும் அதிகரித்துள்ளமையால் வெற்றிலை உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் பாகிஸ்தான் பதில் தூதுவர் அஹமட்கான் சிப்றாவிற்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் ரிஷாத் பதியூதீன் இந்த விடயத்தை பாகிஸ்தான் அரசாங்கம் சாதகமாக பரிசீலித்து, வெற்றிலை ஏற்றுமதியாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் நன்மை பயக்க வேண்டும். கடந்த ஜூலை மாதம் தொடக்கம் இவ்வாறான மேலதிக இறக்குமதி வரியை பாகிஸ்தான் அரசு அமுல்படுத்தியிருப்பதனால் வெற்றிலை உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திச் செலவைக்கூட ஈடுசெய்ய முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் வடமேல்மாகாணத்தில் புத்தளம், குருணாகல் போன்ற மாவட்டங்களிலேயே வெற்றிலை உற்பத்தி பெருமளவில் இடம்பெற்றுவருகிறது. இலங்கையானது பாகிஸ்தானுக்கு மட்டுமே வெற்றிலையை ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் வெற்றிலைக்கு பாகிஸ்தான் ரூ.200 (இலங்கையின் 291ரூபா) மேலதிகவரி அறவிடப்படுகின்றது. இந்த விடயத்தை பாகிஸ்தான் அரசு மீள்பரிசீலனை செய்து வெற்றிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என பதியூர்தீன் கேட்டுக்கொண்டார்.
இவற்றைக் கேட்டறிந்துகொண்ட பாகிஸ் தான் பதில் தூதுவர், இந்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் காத்திரமான முடிவொன்றை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் கராச்சியில் நடைபெறவுள்ள இலங்கை - பாகிஸ்தான் கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு மாநாடு தொடர்பிலும் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டமை குறிப் பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM