யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. தீவிரவாதிகளின் ஆரம்ப காலமும் இவ்வாறுதான் இருந்தது. எனவே பிரதமர் பாரதூர தன்மையை விளங்கிக்கொள்ளாவிடின் விலகி செல்ல வேண்டும் என தூய்மையான ஹெல உறுமய அமைப்பு தெரிவிக்கின்றது.
அதேநேரம் வடக்கிலுள்ள பொலிஸார் மீது ஆயுத தாக்குதல் நடத்துகின்ற போது எதிர்தாக்குதல் நடத்த பொலிஸார் அச்சப்படுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்பன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் ஆயுதக்குழுக்களினால் பொலிஸார் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு முன்பு பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தார். 6 மாதங்களுக்கு முன்பு மற்றுமொரு பொலிஸ் அதிகாரி ஆவா குழுவின் ஆயுத தாக்குதலுக்கு இலக்காகினார்.
இவ்வாறான ஆயுத குழுக்கள் தாக்குதல் நடத்தினாலும் எதிர் தாக்குதல் நடத்துவதற்கு பொலிஸார் அச்சப்படுகின்றார்கள். காரணம் பொலிஸ் ஆணையை பொருட்படுத்தாமல் பயன்படுத்திய இரு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலி ஸார் இருவர் இன் றும் சிறையில் இருக்கின்றார்கள்.
1980 ளில் வடக்கில் தீவிரவாத சக்திகள் செயற்பாடுகள் ஆரம்பித்தபோது அங்கு சேவையிலிருந்து பொலிஸ் அதிகாரிகளை கொன்று குவிப்பதையே முதலில் செய்தார்கள். இன்று 35 வருடங்களின் பின்பு 1980 களில் இருந்த நிலைமையை நோக்கி இலங்கை மீண்டும் நகர்வதாகவே எமக்கு தெரிகின்றது. வடக்கு, கிழக்கில் மீண்டும் இவ்வாறான அராஜக செயற்பாடுகள் இடம்பெறுவதற்காக அப்பகுதியை இராணுவத்தினர் மீட்கவில்லை.
இராணுவத்தை பாதுகாப்போம் என்று ஊடகங்களின் முன்னால் பேசிக்கொண்டால் மாத்திரம் போதுமானதல்ல. தற்போது வடக்கில் இராணுவத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே றோயல் கல்லூ ரியில் கற்ற பிரதமருக்கு அக்கல்லூரியின் இலக்கை மீண்டும் நினைவு படுத்துகின்றேன். கற்றுக் கொள்ளுங்கள் இல்லாவிட்டல் வெளியே செல்லுங்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM