அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பதுபொல எனும் இடத்தில் இன்று காலை 10.40 மணியளவில் கார் ஒன்று அதிசக்தி வாய்ந்த மின்சார கம்பத்தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் நான்கு பேர் படுங்காயம்பட்டு கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த கார் கட்டுநாயக்கவிலிருந்து கினிகத்தேனை அலகல பகுதியை நோக்கி செல்லும் வழியிலேயே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டதன் காரணமாக இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் என விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் காரில் பயணித்த 50 வயது மதிக்கதக்க பெண் ஒருவரும், மூன்று இளைஞர்களும் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
மேற்படி கார் அதிசக்தி வாய்ந்த மின்சார கம்பத்தூணுடன் மோதுண்டதனால் மின்சார கம்பம் சேதத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் அப்பிரதேசத்திற்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும், அதனை சீர் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கினிகத்தேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM