பேய்க்கரும்பில் திறக்கப்பட்ட அப்துல் கலாம் சிலை முன்பு பகவத் கீதையுடன் வைக்கப்பட்ட குர்ஆன், பைபிள் ஆகிய புனித நூல்கள் அகற்றப்பட்டுள்ளன.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 15 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட மணி மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இம் மணி மண்டபத்தில் வீணை மீட்டுவது போன்ற கலாம் சிலை வைக்கப்பட்டு இருந்தது. சிலை முன்பு பகவத் கீதை நூலும் இருந்தது.
ஆனால் , அப்துல்கலாம் சிலை முன்பு பகவத் கீதை நூல் மட்டும் வைக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
சர்ச்சைகள் எழுந்ததையடுத்து, பேய்க்கரும்பில் உள்ள அப்துல் கலாம் சிலை அருகே அவரது அண்ணன் பேரன் சலீம் குர்ஆன் மற்றும் பைபிளை நேற்று வைத்தார். பின்னர் நேற்று மதியம் அவ் இரு நூல்களையும் அகற்றிய அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக இரு நூல்களும் அகற்றப்பட்டன. இதனை அரசியல் ஆக்க வேண்டாம் என்றார். இதேவேளை கலாம் சிலை அருகே பை பிள் மற்றும் குர்ஆனை அனுமதியின்றி வைத்ததாக சலீம் மீது இந்து மக்கள் கட்சியினர் பொலிஸில் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM