பாடசாலை அணிகள் மோதும் வலைப்பந்தாட்டத் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது.
அகில இலங்கை ரீதியாக 360 பாடசாலை அணிகள் பங்குபற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான வருடாந்தமைலோ கிண்ண இறுதிச்சுற்றுவலைப்பந்தாட்டப் போட்டிகள் பதுளை, வின்சென்ட் டயஸ் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3, 4, 5ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
15 நிலையங்களில் நடத்தப்பட்ட முன்னோடி சுற்றுப் போட்டிகளின் மூலம் இறுதிச் சுற்றில் பங்குபற்றுவதற்கு 8 பாடசாலை அணிகள் தகுதிபெற்றுள்ளன.
13 வயதுக்குட்பட்ட பிரிவில் 90 அணிகளும் 15, 17, 19 ஆகிய வயதுக்குட்பட்ட ஏ பிரிவில் தலா 60 பாடசாலை அணிகள் வீதமும் பி பிரிவில் தலா 30 பாடசாலை அணிகள் வீதமும் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளன.
இவ் வருடம் வயதுப் பிரிவுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாலும் 13 வயதுக்குட்பட்ட பிரிவிலும் சம்பியன் , 2ஆம் இடம், 3ஆம் இடம், 4ஆம் இடங்களுக்கான போட்டிகளை நடத்த கல்வி அமைச்சு அனுமதித்துள்ளதால் சம்பியன் அணிக்கு மைலோ கிண்ணம் வழங்கப்படவுள்ளது. ஏனைய வயதுப் பிரிவுகளில் சம்பியன் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு வழமைபோல் மைலோ கிண்ணங்கள் வழங்கப்படும். இப் போட்டிகளுக்கு மைலோ நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM