ஹட்டன் பிரதேசத்தில் அமைச்சர் பழனி திகாம்பரம் கலந்துகொண்ட நிகழ்வொன்றின் போது தனியார் தொலைக்காட்சி ஊடகமொன்றின் செயற்பாடுகளுக்கு அமைச்சின் செயலாளர் இடையூறு விளைவித்த சம்பவமொன்று நேற்று பதிவானது.
தேசிய தாய்ப்பால் வாரம் தொடர்பில் தெளிவுபடுத்தும் பேரணி மற்றும் செயலமர்வு நேற்று ஹட்டனில் நடைபெற்றது. இதனை ஒளிப்பதிவு செய்வதற்கு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் கடந்த 28ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கு தொலைநகல் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைவாக மேற்படி நிகழ்வினை ஒளிப்பதிவு செய்வதற்காக பல ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊட கவியலாளர்கள் ஹட்டனுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நிகழ்வில் உரையாற்றுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் அவரின் ஊடக செயலாளர் அநுர ரத்நாயக்க தனியார் தொலைக் காட்சி ஊடக நிறுவ னம் ஒன்றின் இலட்சினை பொறிக்கப்பட்ட ஒலிவாங்கியை அங்கிருந்து எடுத்துச் சென்றார்.
இந்நாட்டில் சகலருக்கும் தகவல் அறியும் சட்டம் பொதுவானது என்ற வகையில் ஊட கமொன்றை பழிவாங்கும் வகையில் செயற்பட்டமையினை கண்டித்து ஊடகநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன.
குறித்த தனியார் தொலைக்காட்சி நிறுவ னத்தின் செயற்பாடுகளை பாதிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அதிதியாக கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM