பூகோள கல மீளாய்வு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை தொடர்பாக சிவில் அமைப்புக்கள் இணைந்து அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைத்துள்ளது.
அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையின் தொடர் நடவடிக்கை மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் ஐ.நா.சபையின் விசேட பிரநிதிகளை அறிவூட்டுவற்காகவும் சிபாரிசுகளை தயாரிப்பதற்கான செயலமர்வு இன்று காலை 10 மணியளவில் வவுனியா அருந்ததி மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.
4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலக நாடுகள் தொடர்பான மனித உரிமை வளர்ச்சி மீளாய்வுக்காக இலங்கை அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு சமாந்தரமான மற்றும் உண்மையானதுமான ஒரு சிறந்த அறிக்கையை அனுப்பி வைத்துள்ளமை மற்றும் அதன் தற்போதைய நிலமைகள் தொடர்பாகவே இந்த செயலமர்வு இடம்பெற்று வருகின்றது
இந்த செயலமர்வை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், மொன்லார் உட்பட பல சிவில் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை சட்டத்தரணிகள் மற்றும் பல்துறை சார்ந்தவர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
இச் செயலமர்வுக்கு இலங்கையில் உள்ள வடகிழக்கில் உள்ள 7 மாவட்டங்களின் சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM