இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிவரும் இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்று 498 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடிவருகிறது.
இந்திய - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 600 ஓட்டங்களைக் குவித்தது. ஷிகர் தவான் (190), புஜாரா (153) சதம் அடித்தனர்.
பின்னர் விளையாடிய இலங்கை அணி இந்தியாவின் பந்து வீச்சில் திணறியது. திமுத் (2), குணதிலக (16), குசல் மெண்டிஸ் (0) ஆட்டமிழந்தனர். தரங்க 64 ஓட்டங்களுடனும், திக்வெல்ல 8 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.
போட்டியின் 2ஆ-ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 5 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை எடுத்திருந்தது. மெத்தியூஸ் 54 ஓட்டங்களுடனும், தில்ருவன் பெரேரா 6 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
பலோ ஓனை தவிர்க்க இலங்கை இன்னும் 247 ஓட்டங்களைக் எடுக்க வேண்டும் என்ற நிலையில் நேற்று 3ஆ-ம் நாள் ஆட்டம் ஆரம்பமானது.
மெத்தியூஸ், தில்ருவன் பெரேரா ஆகியோர் தொடர்ந்து விளையாடினார்கள். இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
57ஆ-வது ஓவரில் இலங்கை 200 ஓட்டங்களைத் தொட்டது. இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். அவரது பந்தில் மெத்தியூஸ் 83 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து தில்ருவன் பெரேராவுடன் அணித் தலைவர் ரங்கன ஹேரத் ஜோடி சேர்ந்தார்.
தில்ருவன் பெரேரா 94 பந்துகளில் அரைச் சதம் அடித்தார். இந்த ஜோடியையும் ஜடேஜா பிரித்தார். அவரது பந்தில் ஹேரத் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து பிரதீப் களமிறங்கினார். இவர் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க லஹிரு குமார களமிறங்கினார். மறுமுனையில் இருந்த தில்ருவன் பெரேரா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் பவுண்டரி, சிக்ஸர்களாக அடித்தார். உணவு இடைவேளையின் போது இலங்கை 8 விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களை எடுத்திருந்தது.
உணவு இடைவேளைக்கு பிறகு லஹிரு குமார ஆட்டமிழந்தார். காயத்தால் விலகியுள்ள அசேல ஆடவில்லை. இதனால் இலங்கை அணி 291 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
மறுமுனையில் நின்ற தில்ருவன் பெரேரா ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
ஜடேஜா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பலோ ஓனை தவிர்க்க இலங்கை 401 ஓட்டங்களை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் இந்தியா பலோ ஓன் கொடுக்காமல் தொடர்ந்து 2ஆ-வது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிக்க தவான் - முகுந்த் ஜோடி களமிறங்கியது. வந்த வேகத்திலேயே தவான் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாராவும் 15 ஓட்டங்களுடன் வெளியேற முகுந்துடன் ஜோடி சேர்ந்தார் அணித் தலைவர் விராட் கோஹ்லி.
நேற்றைய நாள் முழுவதும் இந்த ஜோடி நிலைத்து நின்றது. ஆனாலும் நேற்றைய நாளின் கடைசி ஓவரை விசிய குணதிலக்கவின் மூன்றாவது பந்தில் முகுந்த் 76 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் ஆட்டமிழந்தார். அத்துடன் மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. விராட் கோஹ்லி 81 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 189 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் பெற்ற 309 ஓட்டங்கள் முன்னிலையுடன் மொத்தம் 498 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது இந்தியா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM