கொக்கெய்ன் சம்பவத்திற்கும் ச.தொ.ச. நிறுவனத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
ச.தொ.ச.வை நான் பொறுப்பேற்ற பின்னர், இந்த நிறுவனம் எந்தவொரு பண்டங்களையும் இறக்குமதி செய்யவில்லை தனியார் வழங்குனர் மூலமே இந்தப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
அண்மையில் சீனிக்கொள்கலனில் கொக்கெய்ன் இருந்ததை கண்டுபிடித்த ச.தொ.ச. ஊழியர் களே பொலிஸாரு க்கு தகவல் கொடுத்தனர். இப்போது அந்த விடயம் தொடர்பில் விசாரணை இடம் பெற்றுவருகின்றது. இந்த விசா ரணை முடிவு பெறும் வரை, இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடமிருந்து ச.தொ.ச. நிறுவனம் எந்தப்
பொருட்களையும் கொள்வனவு செய்வதை, தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM