நோர்வேயில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூ பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது

Published By: Priyatharshan

28 Jul, 2017 | 06:28 PM
image

நோர்வே நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பணம் மோசடி செய்துவந்த பெண்ணொருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நோர்வே நாட்டில் தாதியர் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடிசெய்து வந்த பெண்ணாருவர் தளவத்துகொட பிரதேசத்தில் வைத்து பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவு அதிகாரிகளால் நேற்று  கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் ஆரம்ப கட்டணமாக  60 ஆயிரம் ரூபா என்றடிப்படையில் 35பேரிடம் பணம் பெற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் இந்த பெண்ணிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு அங்கிகரிக்கப்பட்ட வெளிநாட்டு முகவர் நிறுவனத்துக்குரிய அனுமதிப்பத்திரம் இல்லாதநிலையில் தனது வீட்டில் இருந்தவாறு பணம் சேகரித்துள்ளார். இந்த மோசடியில் மாட்டிக்கொண்ட ஒருவரினால் இதுதொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு செய்த முறைப்பாட்டுக்கமைய, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பணியகத்தின் விசாரணைப்பிரிவு அதிகாரிகள் மாறு வேடத்தில் குறித்த பெண்ணுடன் தொடர்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டு, நபர் ஒருவரை ஆரம்ப கட்டணமாக 60 ஆயிரம் ரூபாவை செலுத்த  தந்திரமான முறையில் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்றவேளை, அவரை கைதுசெய்ய முடிந்துள்ளது. சந்தேக நபரான குறித்த பெண் நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களிடம் இருந்து 21 இலட்சம் ரூபாவுக்கும்  அதிக பணத்தை இவ்வாறு சேகரித்துக்கொண்டுள்ளதாக அவரிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த சந்தேக நபரான பெண்ணை கைதுசெய்யும்போது, அவரிடமிருந்து கடவுச்சீட்டுக்களின் பிரதிகள், தொழில் விண்ணப்பங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளின் பிரதிகள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பெண்ணை கடுவல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்குமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38