தந்தை, 3 பிள்ளைகள் தற்கொலை : சம்பவம் குறித்து மகன் தேரருடன் தாய் பொலிஸில் வாக்குமூலம்

Published By: Priyatharshan

28 Jul, 2017 | 01:44 PM
image

கம்புறுபிட்டியவில் அண்மையில் தந்தையொருவர் தனது 3 பிள்ளைகளையும் தூக்கிட்டதன் பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுது அவரது மனைவி தனது மூத்த மகனான தேரருடன் பொலிஸ்நிலையம் சென்று வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளார்.

 குறித்த சம்பவம் இடம்பெற்று ஒருமாதங்கள் கழிந்த நிலையில் குறித்த தாயார் பொலிஸ் நிலையம் சென்று வாக்கு மூலம் அளித்துள்ளார்.

நான்கு பிள்ளைகளைக் கொண்ட குறித்த குடும்பத்தில் எஞ்சியுள்ள மூத்த ஆண் பிள்ளையான ரன்சேகொட சுதந்த தேரருடன் அவரது தாய் பொலிஸ் நிலையத்திற்கு செற்றுள்ளார்.

கம்புறுப்பிட்டிய பகுதியில்  கடந்த மாதம் 26 ஆம் திகதி வீட்டுக்கு முன்புறத்தில் இருந்த  மரங்களில், 43 வயதுடைய தந்தையொருவர் தனது 16 மற்றும் 10 வயதுடைய மகள்கள், 14 வயதுடைய மகனான தேரர் ஆகியோரை  தூக்கிட்டு விட்டு, வீட்டின் பின்புறத்தில் தீவைத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட நிலையில் பொலிஸாரால் சடங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் தாயார் பொலிஸில் வாக்குமூலமளிக்கையில்,

மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்த எமது குடும்பம், அண்மைக் காலமாக பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்து வந்தது.

குடும்பத்தில் முரண்பாடு ஏற்பட்டதால், எனது இரண்டு மகன்களையும் தேரர்களாக்க தீர்மானித்தோம்.

சில நாட்களில் கணவன் மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்தது சண்டையிட்டதால், நான் எனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றேன். இந்லையில் சில நாட்களுக்கு பின்னர் நான் வீடு திரும்பினேன்.

ஒரு மாதம் கழித்து, வெளிநாடு சென்று பணிபுரிய எண்ணி கணவனிடம் அனுமதி கேட்டேன். அதற்கு அனுமதி தருமாறு கணவனிடம் கேட்டதால் குடும்பத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், மீண்டும் எனது மகள்கள் இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன்.

இந்த நிலையில், வீட்டுக்கு விரைவில் வருமாறு  மகள்கள்மார் தொலைபேசியூடாக எனக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், எனது கணவன் மற்றும் 3 பிள்ளைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக பொலிஸார் மீட்டுள்ளனர் என தாயார் வாக்குமூலமளித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33