தொழிற்சங்க போராட்டத்தை முடக்கும் நோக்குடனே எரிபொருள் வழங்கலை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது. ஆகவே குறித்த பிரகடனத்தை அரசாங்கம் உடன் வாபஸ் பெற வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அத்தியாவசிய சேவைகளாக பெற்றோலிய உற்பத்திகள், திரவ எரிவாயு உட்பட அனைத்து எரிபொருள் தொடர்பில் ஜனாதிபதியால் பிரசுரிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி பத்திரிகையினை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
அர்ஜுன ரணதுங்க இலங்கைக்கு உலக கிண்ணத்தை வென்று கொடுத்து கெப்டன் கூல் என்ற அந்தஸ்தை பெற்றவராவார். அதேபோன்று இன்னும் அமைதியாகவும் எந்தவொரு பதற்றமும் இல்லாமல் தனது கடமையை உரிய முறையில் முன்னெடுத்து வருகின்றார். அதற்கு நான் பாராட்டுகின்றேன். எனினும் அரசாங்கம் மக்கள் பலம் இல்லாத காரணத்தினால் ஆயுத பலத்தை எடுக்க முனைகின்றது. இதன் பிரகாரம் தொழிற்சங்கவாதிகளின் உரிமை போராட்டங்களை தடுத்து நிறுத்துவதற்காக அரசாங்கம் எரிபொருள் வழங்கலை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.
அதுமாத்திரமின்றி கொலன்னாவ கும்பலை வைத்துக்கொண்டு அரசாங்கம் தாக்குதல் நடத்தியது. இரத்தம் சிந்தும் அளவிற்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆகவே ஆயுதத்தை தூக்கும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது. இராணுவத்தை குவித்து தொழிற்சங்க போராட்டத்தை முடக்கினர். இதற்கு இடமளிக்க முடியாது. ஆகவே அரசாங்கம் பிரகடனப்படுத்திய அத்தியாவசிய சேவை பிரகடனத்தை உடனே வாபஸ் பெற வேண்டும்.
தற்போது அரசாங்கத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக்கட்சிக்கும் இடையில் போர் நடக்கின்றது. இதன் வெளிப்பாடாகவே ஐக்கிய தேசியக் கட்சி பாதாள கும்பல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு தொழிற்சங்க தலைவர்களை தாக்கி அவர்களை கைதும் செய்துள்ளது. ஆகவே இதற்கு இடமளிக்க முடியாது.
ஆட்சியை கைப்பற்றுவதற்கு பாதாள கும்பலை வைத்து ஆட்சி செய்ய முற்படு கின்றது. இந்த கோரிக்கைகளை பிரதமரிடம் கோரி ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நான் கோருகின்றேன். குறித்த பிரகடனத்தை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM